ஹிஜாப் சர்ச்சை.. பள்ளிகள் திறப்பு.. - கர்நாடகத்தில் கொடி அணிவகுப்பு நடத்திய பாதுகாப்புப் படை!
உடுப்பி: ஹிஜாப் சர்ச்சையைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் உடுப்பியில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பாதுகாப்பு படையினர் கர்நாடகத்தில் கொடியேந்தி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது.
இந்தவிவகாரம் நாடுமுழுதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பல கல்லூரிகளிலும் இந்த நிலை தொடர்ந்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டது.

ஹிஜாப்
கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருக்கும் பியூ கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. இனி ஹிஜாப் அணிந்துவரக்கூடாது என்று தெரிவித்தனர். ஆனாலு மாணவிகள் ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர். இதனால் கடந்த டிசம்பர் மாதம், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு 'ஆப்சென்ட்' போடப்பட்டது.

அல்லாஹு அக்பர்
மீண்டும் ஹிஜாப் அணிந்து பெண்கள் கல்லூரிக்கு வந்தபோது, அவர்கள் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். எங்களை கல்லூரிக்குள் விடுங்கள், எங்கள் படிப்பு வீணாகிறது என கண்ணீர் மல்க நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். கடந்த சில தினங்களுக்கு முன், ஹிஜாப் அணிந்து தனியாக வந்த பெண்னை 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொல்லி இந்து மாணவ அமைப்பினர் எதிர்த்தனர். அப்போது அவர், 'அல்லாஹூ அக்பர்' என்று கூறிய வீடியோ வைரலானது.

நீதிமன்றம்
ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம், 'ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தக் கூடாது' என்று உத்தரவிட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக எடுத்துக்கொள்ள மனுதாக்கல் செய்யப்பட்டது. ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு படை
அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மாநிலத்தில் அமைதி நிலைநாட்டப்படும் என தெரிவித்தார். பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுவதால் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக பாதுகாப்பு படை உடுப்பி நகர் முழுவதும்,பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதுபோன்ற கொடி அணிவகுப்பு வழக்கமாக தேர்தல் நேரத்தில் தான் நடத்தப்படும்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications