இமாச்சலப்பிரதேசத்தில் அரியணை ஏறுமா பாஜக?
இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
Recommended Video
சிம்லா: இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. ஆளும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்குமா? பாஜக அரியணை ஏறுமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.
இமாச்சல பிரதேசத்தின் 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 9-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 18 பெண்கள் உட்பட 337 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.
இமாச்சல பிரதேசத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50,25,941. இதில் ஆண்கள் 25,68,761; பெண்கள் 24,57,166.
இத்தேர்தலில் அதிகபட்சமாக தர்மசாலாவில் 12 பேரும் ஜன் துதாவில் குறைந்தபட்சமாக 2 பேரும் போட்டியிட்டனர். சுல்லா தொகுதியில் குறைந்த வாக்காளர்களும் லஹவுலில் அதிகபட்சமான வாக்காளர்களும் இருந்தனர். 7525 மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
நவம்பர் 9-ந் தேதியன்று 75.28% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்குகள் அனைத்தும் 42 மையங்களில் எண்ணப்படுகின்றன. இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.