இந்தியாவை மத ரீதியாக பிரித்ததே இந்து மகா சபாதான்.. அமித் ஷா பேச்சுக்கு ஆனந்த் சர்மா பதிலடி!
இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்க காரணமாக இருந்ததே இந்து மகா சபாவும், முஸ்லீம் லீக்கும்தான் என்று காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா ராஜ்ய சபாவில் பேசி உள்ளார்.
Recommended Video
டெல்லி: இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்க காரணமாக இருந்ததே இந்து மகா சபாவும், முஸ்லீம் லீக்கும்தான் என்று காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா ராஜ்ய சபாவில் பேசி உள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக கடுமையான வாதங்கள் ராஜ்யசபாவில் வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா பெரும் எதிர்ப்பலைகளை சந்தித்து வருகிறது.
நாடு முழுக்க பல மாநில தலைவர்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

என்ன பேசினார்
இந்த மசோதாவை எதிர்த்து பேசிய காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா, ஏன் இந்த மசோதாவை இவ்வளவு அவசரமாக தாக்கல் செய்கிறீர்கள். எதிர் கட்சிகளின் எதிர்ப்பு அரசியல் ரீதியானது இல்லை. கொள்கை ரீதியானது. இந்திய அரசியலமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல் இது. அரசியலமைப்பு சட்டத்திற்கு அடிப்படையை இது கேள்வி கேட்கிறது.

பெரும் கோபம்
சட்டத்தை உருவாக்கியவர்களை இது அவமானப்படுத்துகிறது. அவர்களின் நோக்கை நீங்கள் அசிங்கப்படுத்துகிறீர்கள். பாகிஸ்தானில் இருந்து பிரிவினைக்கு பின் இந்தியா வந்தவர்களுக்கு இந்தியா இடம் கொடுத்துள்ளது. அதில் ஒருவர்தான் டாக்டர் மன்மோகன் சிங், இன்னொருவர் ஐகே குஜ்ரால். இதை எல்லாம் யாரும் மறக்க கூடாது.

அடிப்படை கேள்வி
இந்த சட்டத்தின் அடிப்படையை நீங்கள் உடைக்க முயல்கிறீர்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் இதை எதிர்க்க வேண்டும். ஆனால் இதை அரசியலாக்க கூடாது .இரண்டு நாடு என்ற திட்டத்தை கொண்டு வந்ததே இந்து மகாசபாதான். இதை ஜின்னா கொண்டு வர, இந்து மகாசபா 1937ல் குஜராத்தில் அறிமுகம் செய்தது. இதை பற்றி அமித் ஷா பேச மாட்டார்.

தலையீடு
இதில் பிரிட்டிஷ் அரசின் தலையீடும் இருக்கிறது. முஸ்லீம் லீக், இந்து மகா சபா இணைந்துதான் இந்தியாவை பிரித்து வடகிழக்கு மாநிலமே பொங்கி எழுந்துள்ளது அங்கு போராட்டங்கள் நடந்து வருகிறது அந்த மக்கள் உங்கள் சட்டத்தை பார்த்து பயப்படுகிறார்கள்

அகதிகள் முகாம்
அகதிகள் முகாம்களுக்கு அமித் ஷா ஒருமுறையாவது சென்று பார்த்து இருக்கிறாரா? அங்கு மக்கள் எப்படி இருப்பார்கள், எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அங்கு சென்று பார்த்தால்தான் அவருக்கு அகதிகள் முகாமின் வலி தெரியும்
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications