காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு கோயில்... அடிக்கல் நாட்டியது இந்து மகாசபை!
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு இந்து மகாசபையினர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளனர்.
குவாலியர்: மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு இந்து மகாசபையினர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளனர்.
இந்து மகாசபையினர் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கோயில் கட்ட குவாலியர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளனர். ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதனால் இந்து மகாசபையினர் டௌலத்கஞ்சில் உள்ள தங்களது அலவலகத்திலேயே கோட்சேவிற்கு கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளனர். இந்து மகாசபை அலுவலகத்தில் கோட்சேவின் சிலை நிறுவப்பட்டு அதற்கு நேற்று மலர் தூவி மரியாதையும் செலுத்தப்பட்டுள்ளது.

கோட்சே தூக்கிலிடப்பட்ட தினம்
காந்தியை கொன்ற வழக்கில் மரணதண்டணை அளிக்கப்பட்டு, அம்பாலா சிறையில் நவம்பர் 15, 1949ல் கோட்சே தூக்கிலிட்டு கொல்லப்பட்டார். அன்றைய தினத்தை இந்து மகாசபையினர் 'தியாக தினமான' அனுசரிக்கின்றனர்.

இந்து மகா சபை மரியாதை
இதனையொட்டியே நேற்று குவாலியர் அலுவலகத்தில் கோட்சேவிற்கு மரியாதையும் செய்யப்பட்டுள்ளது. கோட்சேவின் படத்திற்கு இந்து மகாசபையினர் மரியாதை செய்யும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

சொந்த அலுவலகத்திலேயே திறப்பு
இந்துமகாசபையை சேர்ந்த ஜெய்வீர் பரத்வாஜ் இது குறித்து கூறும் போது, கோட்சேவிற்கு கோயில் கட்ட நிலம் ஒதுக்க மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனையடுத்தே டௌலத்கஞ்ச் பகுதியில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

முதல்வர் மறைமுக ஆதரவா?
இந்து மகாசபையின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் மறைமுகமாக இந்து மகாசபைக்கு ஆதரவு தெரிவிப்பதாக எதிர்க்கட்சியை சேர்ந்த அஜய் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் சவுகான் உதட்டில் மட்டுமே காந்தியின் பெயர் உச்சரிக்கப்படுகிறது, ஆனால் அவரது உள்ளத்தில் கோட்சே தான் இருக்கிறார். அப்படி இல்லை என்றால் எப்படி இந்து மகாசபையினர் இப்படி வெளிப்படையாக கோட்சேவிற்கு கோவில் கட்ட அடிக்கல் நாட்டி இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications