இந்தியாவில் முதல் முறை.. வெடிகுண்டு புரளி கிளப்பியதற்கு கோகுலுக்கு கிடைக்கப்போகுது ஆயுள் சிறை
பெங்களூர்: விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கோகுல் மீது ஆயுள் தண்டனை விதிக்கப்பட கூடிய சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வெடிகுண்டு புரளி கிளப்பிய ஒரு குற்றத்திற்காக இந்தியாவில் முதல் முறையாக இந்த சட்டம் தற்போதுதான் பிரயோகிக்கப்படுகிறது.
டெல்லி மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்பட்ட விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக வாட்ஸ்சப் மூலமும், தொலைபேசி மூலமும் மிரட்டல் விடுத்த வழக்கில், பெங்களூரில் வசித்து வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த கோகுல் (33) என்ற தனியார் ஊழியர் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின்போது, கடந்த சில மாதங்கள் முன்பு தனது மனைவி அனுராதாவை கொலை செய்த குற்றத்தையும் கக்கிவிட்டார். இந்நிலையில், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக 'The Suppression of Unlawful Acts Against Safety of Civil Aviation (SUASCA) Act 1982' என்ற சட்டப்பிரிவின்கீழ் கோகுல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இச்சட்டத்தின் பிரிவு 3(1)(d)-ன்படி, அதிகபட்சமாக இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியும். இதுவரை வெடிகுண்டு புரளி கிளப்பிய யார் மீதும் இந்த சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. விமான நிலையங்களில் வெடிகுண்டு சோதனை நடக்கும்போது ஏற்படும் காலதாமதத்தால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே இனிமேலும், இதுபோல விஷமிகள் புரளி ஏற்படுத்தாமல் இருக்க இந்த கடும் நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது.
2009ம் ஆண்டு, கோவாவில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், நோய் கிருமியுடன் கூடிய ஊசியை வைத்துக்கொண்டு, விமானத்தை கடத்துவதாக மிரட்டினார். அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது மேற்கண்ட சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு அந்த சட்டத்திற்கு கோகுல் இரையாகியுள்ளார். ஆனால், புரளி கிளப்பியதற்கே இவர் மீது இந்த சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோகுல் மீது திட்டமிட்டு மனைவியை கொலை செய்த வழக்கும் நிலுவையிலுள்ளதால், கோகுலால் இன்னும் 14 வருடங்களுக்கு முன்பாக வெளியுலகத்தை பார்க்க முடியாது. அவரது 3 வயது மகள் அதற்குள் 17 வயது மகளாக வளர்ந்து நிற்பாள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications