வரதட்சணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற வாட்ச்மேன் - ஒடிசாவில் பயங்கரம்!
புவனேஷ்வர்: ஒடிசாவில் வாட்ச்மேன் ஒருவர் தனது மனைவியை வரதட்சணைக்காக உயிரோடு எரித்துக் கொன்ற குற்றத்திற்காக பெற்றோருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின், பனிகிரகி நகர் பெர்ஹம்பூர் நகரைச் சேர்ந்த லக்ஷ்மி நாராயணன் சாகு என்கின்ற அந்த வாட்ச்மேன் தன்னுடைய தாய், தந்தையரான ரபீந்த்ரா மற்றும் லக்ஷ்மி குமாரியுடன் இணைந்து தனது மனைவி புஷ்பாஞ்சலியை வரதட்சிணைக்காக கொடுமைப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் அவர் கொடுமையின் உட்சமாக தனது மனைவியை உயிரோடு எரித்துக் கொலை செய்துள்ளார். அவருடைய வீட்டிலிருந்து மண்ணெண்ணெய் கேன் மற்றும் எரிந்த நிலையிலான உடைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புஷ்பாஞ்சலியின் தந்தையான ராஜேந்திர பிரசாத் சாகு கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய படா பஜார் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். மூவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருவதாக காவல்துறை அதிகாரி ஏ.கே.மோகண்டி தெரிவித்துள்ளார்.
ஒடிசா மற்றும் புவனேஷ்வரில் வரதட்சிணைக்காக பெண்கள் கொலை செய்யப்படுவது, கொடுமை படுத்தப்படுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications