கள்ளக்காதல்... பீகாரில் 16 வயது பெண்ணையும், காதலரையும் எரித்துக் கொன்ற உறவினர்கள்
Subscribe to Oneindia Tamil
கயா: பீகாரில் 16 வயது பெண்ணையும், அவரது காதலரையும் உறவினர்கள் எரித்து கவுரவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் கயா அருகே அமேடா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராம். ஏற்கனவே திருமணமான ஜெயராமுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், உறவினர் ஒருவரின் 16 வயது மகளை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் காதலர்கள் இருவரும் ஊரை விட்டு ஓட முயற்சித்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் வைத்து இருவரையும் பெண் வீட்டார் பிடித்தனர். பின்னர், அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்த உறவினர்கள், இருவரையும் உயிரோடு எரித்துக் கொலை செய்தனர். முறைகேடாக திருமணம் செய்ய முயற்சித்ததால், இருவரையும் கவுரவக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் போலீஸ் ஒருவரைக் கைது செய்துள்ளது. தொடர்ந்து இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications