சர்வீஸ் டாக்ஸ் தகராறு.. பெங்களூரு ஹோட்டலில் பெண் வாடிக்கையாளரை தாக்கிய கேஷியர்!
பெங்களூரு: அதிக காசு கேட்கிறீர்களே என்று கேட்ட பெண்மணி, ஹோட்டல் கேஷியரால் தாக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பானசவாடி அருகேயுள்ள கம்மனஹள்ளியில் உள்ளது, சுக்சாகர் என்ற சைவ உணவகம். சம்பவத்தன்று, ஹெச்ஆர்பிஆர் லேஅவுட்டை சேர்ந்த ஷரோன் நிகல் என்ற 35வயது வங்கி பெண் ஊழியர், அந்த உணவகத்திற்கு காலை சிற்றுண்டி வாங்க சென்றுள்ளார்.
மொத்த பில் தொகை ரூ.245 ஆகும். ஆனால், பணமாக கையில் இல்லாததால், ஷரோன், டெபிட் கார்டை கேஷியர் வினோத்திடம் கொடுத்துள்ளார். டெபிட் கார்டுக்கு சேவை வரியாக, 4 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று வினோத் கூறியதற்கு, ஷெரோன் பரவாயில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால், டெபிட்கார்ட் மூலம், வினோத் வசூலித்த பணம் ரூ.315 என்று கூறப்படுகிறது. இவ்வளவு அதிகமாக பணம் எடுக்க தேவையில்லையே என்று கூறி ஷெரோன், கேஷியரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், வினோத், தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து, ஷரோனை பெண் என்றும் பாராமல் முகத்தில் குத்தி, பிடித்து தள்ளியுள்ளார்.
இதை பார்த்த பிற வாடிக்கையாளர்கள் ஓடிவந்து, இருவரையும் விலக்கிவிட்டுள்ளனர். வாடிக்கையாளர்களில் ஒருவர் பானசவாடி போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து கேஷியர் மற்றும் ஷரோனை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
ஷரோன் அளித்த புகாரின் பேரில் வினோத் மீது, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 354ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெண்ணின் மீதான தாக்குதல், மாண்பை குலைத்தல் போன்ற சட்டப் பிரிவின்கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களில் சிலர் சாட்சியம் சொல்ல முன்வந்துள்ளனர்.
இதனிடையே, வினோத் அளித்த வாக்குமூலத்தில், டெபிட் கார்டை, ஒன்றுக்கு, 4முறை ஸ்வைப் செய்ததாகவும், அதனால்தான் ஷரோன் தகராறை ஆரம்பித்ததாகவும் கூறியுள்ளார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications