வாடிக்கையாளர்கள் போன்று நடித்து விபச்சாரம் செய்த மாடல் ரஷ்மி நாயரை கைது செய்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள போலீசார் வாடிக்கையாளர்கள் போன்று நடித்து மாடல் ரஷ்மி நாயர் மற்றும் அவரது கணவர் ராகுல் பசுபாலனை கைது செய்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவரும், கிஸ் ஆப் லவ் போராட்ட தலைவருமான ராகுல் பசுபாலன் ஆன்லைன் மூலம் விபச்சாரம் செய்து வந்துள்ளனர். அவர்கள் விபச்சாரம் செய்வது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை போலீசார் நடத்திய சோதனையில் ரஷ்மி, ராகுல், ரவுடி அக்பர் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொச்சு சுந்தரிகள்

கொச்சு சுந்தரிகள்

சவுதியில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் ஃபேஸ்புக்கில் உள்ள கொச்சு சுந்தரிகள் பக்கத்தில் தனக்கு வேண்டிய பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு வந்துள்ளார். அவர் கேட்கும் பெண்களை ரஷ்மியும், ராகுலும் அவருக்கு அளித்து வந்துள்ளனர்.

ரஷ்மி

ரஷ்மி

ராகுல் பெண்களை அழைத்து வந்து வாடிக்கையாளர்களிடம் விடுவார். ரஷ்மி தான் அவர்களுக்கான பணத்தை பேசி வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் தான் கொச்சு சுந்தரிகள் பக்கம் குறித்து போலீசாருக்கு புகார் சென்றுள்ளது.

போலீஸ்

போலீஸ்

விசாரணையில் ரஷ்மியும், அவரது கணவரும் பெண்கள், சிறுமிகளை வைத்து விபச்சாரம் செய்தது தெரிய வந்தது. இதற்கிடையே சவுதியில் இருந்த நபரை போலீசார் நைசாகப் பேசி கேரளாவுக்கு வரவழைத்து கைது செய்தனர்.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

போலீசார் சிலர் ராகுலை அணுகி ஆசையை தீர்த்துக் கொள்ள பெண்கள் வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் போன்று கேட்டுள்ளனர். ராகுல் அவர்களை ரஷ்மியிடம் விலையை பேசி அளிக்குமாறு கூறி அவரை வரவழைத்துள்ளார்.

கைது

கைது

ரஷ்மி ஹோட்டலுக்கு வந்தவுடன் ராகுலையும், அவரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+