மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 19% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு.. ஆய்வறிக்கையில் திடுக் தகவல்
டெல்லி: நாடு முழுவதும் 6 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7,928 வேட்பாளர்களில், 19% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது சுமார் 1,500 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு நடத்திய ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் இத்தகலை வெளியிட்டுள்ளது

இந்த 1,500 வேட்பாளர்களில் 13% வேட்பாளர்கள் அதாவது 1,070 பேர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் உட்பட பல்வேறு அதிதீவிர கிரிமினல் வழக்குகள் உள்ள அதிர்ச்சி தகவலையும் Association for Democratic Reforms அமைப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்களில், 56 வேட்பாளர்கள் மீது இதர கிரிமினல் வழக்குகளும், 55 பேர் மீது கொலை வழக்கும், 184 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 வேட்பாளர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு உட்பட 126 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும் 47 வேட்பாளர்கள் மீது கடத்தல் வழக்குகளும், 95 வேட்பாளர்கள் மீது வெறுப்பு அரசியல் பிரசாரங்களில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகளும் உள்ளன.
இந்த ஆய்வறிக்கையில் குற்ற வழக்குகள் கொண்ட கட்சி ரீதியான வேட்பாளர்களின் சதவீதமும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 433 பாஜக வேட்பாளர்களில் 29% அதாவது 124 பேர் மீதும், 419 காங்கிரஸ் வேட்பாளர்களில் 26% அதாவது 107 வேட்பாளர்கள் மீதும், பகுஜன் சமாஜ் கட்சியின் 16% அதாவது 381 வேட்பாளர்களில் 61 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்வேட்பாளர்களில் 58% 69 பேரில் 40 பேர் மீது அதிதீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது
தமிழகத்தை பொறுத்த வரை 13 % வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள மக்களவைத் தொகுதிகளில் 265 தொகுதிகளில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும் ஏடிஆர் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications