ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ: நூற்றுக்கணக்கான பயணிகள் தப்பினர்

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா நகரில் இருந்து டெல்லிக்கு செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் செவ்வாய்கிழமை மாலை 4.55 மணிக்கு ஹவுராவில் புறப்பட தயாராக இருந்தது.
பயணிகள் அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து இருந்தனர். வழியனுப்ப வந்த உறவினர்களுக்கு ரயிலுக்கு வெளியே கூடியிருந்தனர்.
ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடத்துக்கு முன்பு ரெயிலின் ஜெனரேட்டர் பெட்டியின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியது. அதையொட்டி இருந்த பயணிகள் பெட்டியின் லக்கேஜ் அறையில் இருந்தும் புகை கிளம்பியது.
திடீர் என்று புகை மூட்டம் மேலும் அதிகரித்தது. புகை வாசனை வருவதை அறிந்த பயணிகள் சத்தம் போட்டு அனைவரையும் உஷார்படுத்தினார்கள். இதற்குள் தீ பரவ ஆரம்பித்தது.
உடனே பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக பெட்டி படுக்கையுடன் கீழே இறங்கினார்கள். ரயில் பெட்டிகளை சரிபார்க்கும் ஊழியர்களும் தீப்பிடித்ததை கண்டுபிடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீப்பிடித்த ரயில் பெட்டி தனியாக கழற்றி விடப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ரயில் புறப்படும் முன் தீ விபத்து ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான பயணிகள் உயிர் தப்பினார்கள். ரயில் செல்லும்போது தீப்பிடித்து இருந்தால் காற்றின் வேகத்தில் பயணிகள் பெட்டிக்கும் பரவி மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும்.
ஜெனரேட்டர் பெட்டியில் இருந்து புகை வருவதை முதலில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் சத்ய நாராயண்யஷ் பார்த்தார். அப்போது ரயில் புறப்பட 2 நிமிடமே இருந்தது. உடனே அவர் என்ஜினுக்கு ஓடிச்சென்று டிரைவரிடம் ரயிலை எடுக்க வேண்டாம், பெட்டியில் புகை வருகிறது என்று உஷார்படுத்தினார். அதன்பிறகுதான் அதிகாரிகள் தகவல் கிடைத்து அங்கு வந்தனர்.
ஜெனரேட்டர் பெட்டியில் சரக்குகள் அறையும் உள்ளது. இதில் சிகரெட் பண்டல்கள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் இருந்துதான் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றி இருக்கலாம என்று தெரிய வந்தது. பார்சலை அனுப்பியது யார்? நாசவேலையா? என விசாரணை நடந்து வருகிறது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications