தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் ஓய்வு: புதிய ஆணையராக எச்.எஸ்.பிரம்மா நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையாளராக எச்.எஸ். பிரம்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையாளராக உள்ள சம்பத் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதன் காரணமாக, தற்போது தேர்தல் ஆணையாளராக உள்ள எச்.எஸ்.பிரம்மா, புதிய தலைமை தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2012ம் ஆண்டு ஜூன் மாதம் தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றவர் வி.எஸ்.சம்பத். குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், நாட்டின் பொதுத்தேர்தல் போன்ற முக்கிய நிகழ்வுகள் இவர் தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும்போது நடந்தன. சர்ச்சைகளில் சிக்காதவர் என்று பெயரெடுத்த 65 வயதான சம்பத், நாளையுடன் ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து தேர்தல் ஆணையராக உள்ள எச்.எஸ்.பிரம்மா புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications