கணக்கில் காட்டாத பணம் ரூ. 23 லட்சம் பறிமுதல், 3 பேர் கைது: ஹுப்ளி போலீசார் அதிரடி
ஹுப்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கணக்கில் காட்டாத ரூ.23 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர், மேலும், அதில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹுப்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கணக்கில் காட்டாத ரூ.23 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அதில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
500, 1000 ரூபாய் பழைய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது முதல் நாடு முழுவதும் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஹுப்ளி அருகே புதன்கிழமை இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகனம் ஒன்றினை வழிமறித்த போலீசார் அதில் கணக்கில் காட்டாத பணம் ரூ.23 லட்சம் இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த பணத்தில் 20 லட்சம் மதிப்பில் புதிய 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், 3 லட்சம் 100 ரூபாய் நோட்டுகளும் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அந்தப் பணம் ஹுப்ளியில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கடாக்கில் உள்ள லட்சுமிஸ்வரா என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது கண்டறியப்பட்டது.குண்டகேலா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வாகனத்தை மடக்கி ஆய்வு நடத்தி பணத்தை பறிமுதல் செய்தனர். அதில் தொடர்புடைய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications