மின்கசிவால் ஜெய்ப்பூர் அரண்மனையில் பயங்கர தீ விபத்து: பல அரிய பொருட்கள் பலத்த சேதம்
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள நண்பர்களின் அருங்காட்சியக கட்டிடத்தில் இன்று மின்கசிவால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அங்கிருந்த அதிக விலைமதிப்புள்ள பல பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ளது நண்பர்கள் அருங்காட்சியகக் கட்டிடம். இங்கு கலைஞர்களின் கலைப் பொருட்கள் பல பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன.

இந்நிலையில், இன்று அக்கட்டிடத்தில் மின்கசிவு காரணமாக திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்து தொடர்பாக அங்கு தீயை அணைக்க வந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மிகப்பெரிய தீ விபத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், பொருட்காட்சியகத்தில் இருந்த பொருட்கள் பலத்த சேதமடைந்துள்ளன. இத்தீவிபத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை' என இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட பொருட்காட்சிக்கு சிறிது தொலைவில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதிக்கும் தீ பரவுவதற்கு முன்னதாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications