மணிப்பூர் பள்ளியில் 8 மண்டை ஓடுகள் மற்றும் சில எலும்புகள் கண்டுபிடிப்பு.. "ஷாக்"கில் மக்கள்!

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூர் பள்ளி வளாகத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மணிப்பூர் பள்ளி வளாகத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் முழுமையான விசாரணை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆர்வலர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

மணிப்பூரில் உள்ள இம்பால் மாவட்டத்தில் உள்ள பதோம்பிசானா ள்ளி வளாகத்தில் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இதற்காக கடந்த 26ம் தேதி தரையைத் தோண்டிய போது அங்கு 8 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

Human skulls found in Manipur

பள்ளி வளாகத்தில் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கண்டுபிடிக்கப் பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அனிப்புர் அரசை மனித உரிமை ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மணிப்பூர் மூத்த குடிமக்கள் சமூகத்தின் செயலாளர் காய்தேம் மணி இது தொடர்பாக கூறுகையில், ‘தோம்பிசானா உயர்நிலைப்பள்ளியில் 8 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் அரசாங்கம் ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணைக் கமிஷனை அமைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் அமலில் உள்ள மணிப்பூரில் 1980ம் ஆண்டு முதல் இதுவரை 20 பேர் காணாமல் போயிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+