ஜெ. சொத்துக்களை அரசு கைப்பற்ற வேண்டும்.. வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
ஹைதராபாத்தில் உள்ள ஜெயலலிதா சொத்துக்களை அரசு ஏற்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஹைதராபாத்: ஜெயலலிதாவின் சொத்துகளை தெலுங்கானா அரசு ஏற்க வேண்டும் என வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து ஹைதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹைதராபாத் புறநகர் பகுதியான பேட்பஷிராபாத் அருகே ஜி.டி. மெட்லா, என்ற இடத்தில் ஜெ.ஜெ. கார்டன் என்ற பெயரில் சுமார் 11 ஏக்கர் அளவில் சொத்துகள் உள்ளன. இதேபோல் ஸ்ரீ நகர் காலனியில் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ஒரு வீடும் உள்ளது.

சினிமாவில் நடித்த போது அவர் இந்த வீட்டுக்கு வந்து தங்குவதுண்டு. அரசியலில் நுழைந்த பிறகு அவர் இங்கு வருவது இல்லை என கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீட்டை ஒரு தனியார் நிறுவனத்துக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார்.
இந்தநிலையில் ஜெயலலிதாவின் பெயரில் ஹைதராபாத்தில் உள்ள அனைத்து சொத்துகளையும் தெலுங்கானா அரசு ஏற்க வேண்டும் என கூறி கைரிப் கைடு என்ற அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லாததால் அந்த சொத்துக்களை தெலுங்கானா அரசு ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு ஹைதராபாத் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மனுதாரருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கு பொது நலநோக்கத்தோடு தொடரப்படவில்லை விளம்பரத்திற்காகவே தொடரப்பட்டுள்ளது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications