பிரதமர் ஆசையில் சுற்றுபவர்களைவிட எனக்கு தான் அதிக தகுதி உள்ளது: நிதிஷ் குமார்
பாட்னா: பிறரைக் காட்டிலும் தான் தான் பிரதமர் ஆக அதிக தகுதி உள்ளவர் என்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஆளும் திறனுக்கு பெயர் போனவர். அவர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்க நினைத்தவுடன் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் அவருக்கு பிரதமர் ஆகும் ஆசை வந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில்,
பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு சுற்றிக் கொண்டிருக்கும் பலரைக் காட்டிலும் அந்த பதவிக்கு எனக்கு தான் அதிக தகுதி உள்ளது என்றார்.
மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தாலோ அல்லது வெளியில் இருந்து காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தாலோ பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வது கடினமாகிவிடும் போல. மூன்றாவது அணியில் நிதிஷ், அதிமுக செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உள்ளிட்டோர் பிரதமராக விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications