ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டன.

இந்த நிலையில் திடீரென ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறப்பட்டது. இதற்கு சிவசேனா கட்சி வரவேற்பு தெரிவித்திருந்தது.
இது நாடு முழுவதும் மதச்சார்பற்ற சக்திகளை கடும் அதிர்ச்சியடைய வைத்தது. இதனிடையே இன்று தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மோகன் பகவத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் தாம் தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான செய்தியும் தவறானது எனவும் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications