ஏகப்பட்ட அச்சுறுத்தல்: இந்த ஆண்டாவது மோடி குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டில் நின்று உரையாற்றுவாரா?
டெல்லி: தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் சுதந்திர தினத்தன்று டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டில் நின்று உரையாற்றுமாறு உள்துறை அமைச்சகம் அவரை வலியுறுத்தியுள்ளது.
குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டில் நின்று உரையாற்ற மோடி விரும்பவில்லை. ஆனால் அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால் அவரை கண்ணாடி கூண்டுக்குள் நின்று உரையாற்றுமாறு உள்துறை அமைச்சகம் வலியுறுத்துகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

மோடிக்கு அதிகம் அச்சுறுத்தல் உள்ளது என்று உளவுத் துறை தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தியை அடுத்து அதிக அச்சுறுத்தல் இருக்கும் பிரதமர் மோடி என்று உளவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதனால் தான் வரும் 15ம் தேதி குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டில் நின்று உரையாற்றுமாறு மோடியை வலியுறுத்துங்கள் என உள்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு மோடி குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டில் நின்று உரையாற்ற மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி வரும்போதிலும் அவர் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது, பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருவது ஆகியவற்றால் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லிக்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. நகரில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
-
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications