இந்திராணியின் 'அந்த' ஒரு பொய்யை நம்பி ஷீனாவை கொல்ல உதவினேன்: சஞ்சீவ் கன்னா

Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது மகள் விதியின் உயிருக்கு ஆபத்து என்று இந்திராணி தெரிவித்ததால் தான் ஷீனாவை கொலை செய்ய உதவியதாக சஞ்சீவ் கன்னா தெரிவித்துள்ளார்.

ஸ்டார் இந்தியா முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணிக்கு அவரது முதல் கணவரான சித்தார்த் தாஸ் மூலம் பிறந்தவர்கள் ஷீனா போரா, மிகைல் போரா. இதில் ஷீனாவை இந்திராணி தனது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவின் உதவியுடன் கொலை செய்தார்.

இந்நிலையில் இது குறித்து சஞ்சீவ் கன்னா போலீசாரிடம் கூறியிருப்பதாவது,

ஷீனா

ஷீனா

எனக்கும் இந்திராணிக்கும் பிறந்த மகள் விதி. என் மகள் விதியை ஷீனாவும், மிகைலும் கொலை செய்ய திட்டமிட்டதாக இந்திராணி என்னிடம் தெரிவித்தார். அதனால் அவர்கள் இருவரையும் கொலை செய்ய உதவுமாறும் கூறினார்.

மகள்

மகள்

என் மகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தான் நான் ஷீனாவை கொலை செய்ய இந்திராணிக்கு உதவி செய்தேன். நானும், அவரும் சேர்ந்து தான் ஷீனாவை கழுத்தை நெறித்துக் கொன்றோம்.

சொத்து

சொத்து

ஷீனாவையும், மிகைலையும் கொலை செய்துவிட்டால் பீட்டர் முகர்ஜியின் கோடிக்கணக்கான சொத்துக்கள் விதிக்கு தான் கிடைக்கும் என்று இந்திராணி எனக்கு ஆசை வார்த்தை கூறினார். அவரின் பேச்சை நம்பி ஏமாந்துவிட்டேன்.

வெட்கம்

வெட்கம்

ஷீனாவை கொலை செய்த பிறகு தான் அவர் என் மகளை கொல்ல திட்டமிடவில்லை என்பதும், இது எல்லாம் இந்திராணியின் வேலை என்பதும் எனக்கு தெரிய வந்தது. அதில் இருந்து ஷீனாவை கொலை செய்ததை நினைத்து நினைத்து நொந்து கொண்டிருக்கிறேன் என்றார் கன்னா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+