நானும் ஒருநாள் நாட்டின் பிரதமராக வருவேன்... லாலு பிரசாத் யாதவ்
டெல்லி: தாம் நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற கனவு இன்னமும் தகர்ந்துபோய்விடவில்லை ஒருநாள் நாட்டின் பிரதமராக வருவேன் என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சிக்கு லாலு பிரசாத் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
மதவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவே காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். நரேந்திர மோடி, அரவிந்த் கேஜ்ரிவால் போன்றோர் எந்த வகையிலும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான் என் நோக்கம்.
லோக்சபா தேர்தலில் தேர்தலில் லோக் ஜனசக்தி மற்றும் காங்கிரஸுடன் கூட்டணிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் முயற்சி மேற்கொள்ளும். காங்கிரஸுடன் நிச்சயம் கூட்டணி வைப்போம். பொறுத்திருந்து பாருங்கள்.
மதவாத சக்திகள் கையில் இந்தியா சிக்குவதைத் தடுப்பதே நோக்கம். எனக்கு ராம் விலாஸ் பாஸ்வானுடனோ காங்கிரஸுடனோ எந்த பிரச்னையும் இல்லை.
நான் சிறைக்கு செல்ல காரணமே ராகுல் காந்தி என்று கூறப்படுவதில் உண்மை ஏதும் இல்லை. அப்படியான ஒரு பொய் திட்டமிட்டு பரப்பப்படுகிறது
நாங்கள் மூன்றாவது அணியில் இடம்பெறவில்லை. 3வது அணியில் உள்ள கட்சிகளின் ஒவ்வொரு தலைவரும் தானே பிரதமர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளனர்.
எனக்கும் பிரதமராக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அந்தக் கனவு இன்னமும் தகர்ந்துபோய்விடவில்லை. நானும் ஒருநாள் நாட்டின் பிரதமராக வருவேன்.
இவ்வாறு லாலுபிரசாத் யாதவ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications