For Daily Alerts
Just In
மோடி பிரதமரானால் கர்நாடகாவை விட்டே போய்விடுவேன்..: தேவ கவுடா அறிவிப்பு
பெங்களூர்: மோடி நாட்டின் பிரதமரானால் கர்நாடகாவை விட்டு வெளியேறிவிடுவேன் என்று முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா அறிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் செய்தியாளர்களிடம் தேவகவுடா கூறியதாவது:
பாரதிய ஜனதா கட்சி லோக்சபா தேர்தலில் 272 தொகுதிகளைக் கைப்பற்றினால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவேன். பாரதிய ஜனதா கட்சியால் பெரும்பான்மையை பெற முடியாது.
தாம் பிரதமராவோம் என்று நரேந்திர மோடி கனவு காண்கிறர். அப்படி மோடி மற்றும் பிரதமராகிவிட்டால் நான் கர்நாடகாவைவிட்டு வெளியேறி வேறு ஏதோ ஒரு இடத்தில் குடியேறுவேன்.
இவ்வாறு தேவகவுடா கூறினார்.
ஏற்கனவே கர்நாடகத்தில் மூத்த எழுத்தாளர் அனந்தமூர்த்தி, மோடி பிரதமரானால் நாட்டைவிட்டே வெளியேறுவேன் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Former Prime Minister and JD(S) supremo HD Deve Gowda on Saturday announced at a news conference in Shimoga that he shall leave Karnataka state if BJP candidate Narendra Modi becomes prime minister.
Story first published: Sunday, April 13, 2014, 11:44 [IST]