நான் தான் தமிழ்நாட்டுக்கும் பாஜக எம்பி.. 'சினிமா' வசனம் பேசிய மலையாள நடிகர் சுரேஷ் கோபி!
திருச்சூர்: கேரளாவுக்கு மட்டும் அல்ல தமிழ்நாட்டுக்கும் நானே பாஜகவின் எம்பியாக செயல்படுவேன் என அம்மாநிலத்தின் திருச்சூர் லோக்சபா தொகுதியில் வென்ற மலையாள நடிகர் சுரேஷ் கோபி பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
தென்னிந்திய மாநிலங்களில் காலூன்றுவதற்கு ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக போராடித்தான் வருகிறது. தமிழ்நாட்டில் இருந்தாவது சில தேர்தல்களில் பாஜக எம்பிக்கள் டெல்லிக்கு போயிருக்கின்றனர்.

ஆனால் இடதுசாரிகளும் காங்கிரஸும் வலிமையாக இருக்கும் கேரளாவில் இதுவரை பாஜக வெற்றி பெற்றதே இல்லை. இந்த சரித்திரத்தை மாற்றிவிட்டார் நடிகர் சுரேஷ் கோபி. திருச்சூர் லோக்சபா தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு இம்முறை வெற்றி பெற்றுவிட்டார் சுரேஷ் கோபி. இதன் மூலம் கேரளாவின் முதல் பாஜக எம்பி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சுரேஷ் கோபி.
கேரளாவின் முதல் பாஜக எம்பியான சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியாகவே கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் நடிகர் சுரேஷ் கோபி எம்பி நேற்று டெல்லி சென்றார். அதற்கு முன்னதாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சுரேஷ் கோபி. அப்போது, கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரே பாஜக எம்பி நீங்கள்தானே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுரேஷ் கோபி, நான் திருச்சூர் எம்பி என்பதால் திருச்சூர் தொகுதிக்கு மட்டுமே செயல்படுவேன் என்பது அர்த்தம் அல்ல. நான் கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்குமான பாஜக எம்பியாக செயல்படுவேன். தமிழ்நாட்டுக்கான விவகாரங்களை கவனிக்கக் கூடிய எம்பியாகவும் இருப்பேன். இதனை லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போதே தெரிவித்தேன். இதனை ஏற்றுதான் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். ஆகையால் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்குமான எம்பியாக செயல்படுவேன் என்றார்.
தமிழ்நாட்டில் பாஜக தனிக் கூட்டணியை அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட தமிழ்நாட்டில் பாஜக வெல்லவில்லை. தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை நிராகரித்துவிட்டனர். ஆனாலும் பாஜகவின் தமிழ்நாட்டு எம்பியும் நானே என நடிகர் சுரேஷ் கோபி இருப்பது இப்போது சர்ச்சையாகிவிட்டது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications