மாயாவதி, முலாயம் இடையே கூட்டணி ஏற்படுத்த முயற்சிப்பேன்: லாலு பிரசாத்
பாட்னா: உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி இடையே கூட்டணியை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்வேன் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருந்த லாலு பிரசாத் யாதவும் நிதிஷ்குமாரும் கை கோர்த்துள்ளனர். இதேபோல்தான் உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியும் சமாஜ்வாடி கட்சியின் முலாயம்சிங் யாதவும் கூட்டணி அமைத்து மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும் என்று லாலு அழைப்பு விடுத்தார்.

இதற்கு பதிலளித்த முலாயம்சிங் யாதவ், மாயாவதியுடன் கூட்டணி அமைக்க தயார் என்றார். ஆனால் மாயாவதியோ இந்த கூட்டணி முயற்சியை நிராகரித்தார்.
இதனிடையே முலாயம் மற்றும் மாயாவதி இடையே கூட்டணியை ஏற்படுத்த தாம் முயற்சிப்பேன் என்று லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஒரு நாள் அல்லது 2 நாளில் நடக்கக் கூடிய விஷயம் அல்ல இது. நிச்சயமாக பாஜகவை உத்தரப்பிரதேசத்தில் தோற்கடிக்க இருவரும் கரம் கோர்ப்பார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications