நிலக்கரி சுரங்கத்தை திறக்க ரூ.2.55 கோடி லஞ்சம் - ஐ.ஏ.எஸ் அதிகாரி உட்பட மூவர் ”சஸ்பெண்ட்”!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கிட்டதட்ட 2 கோடியே 55 லட்ச ரூபாய் லஞ்ச வழக்கில் கைதான ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மூடப்பட்ட நிலக்கரிச் சுரங்கத்தைத் திறப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு 2 கோடியே 55 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட கனிமவளத் துறையின் முதன்மைச் செயலரும், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான அசோக் சிங்வியை பணியிடை நீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

சித்ரோகரைச் சேர்ந்த நிலக்கரிச் சுரங்க அதிபர் ஷெர்கானுக்குச் சொந்தமான நிலக்கரிச் சுரங்கங்களின் உரிமத்தை நிலக்கரித் துறை ரத்து செய்தது. இதையடுத்து மூடப்பட்ட சுரங்கங்களை மீண்டும் செயல்பட அனுமதி வழங்குவதற்கு ஷெர்கானிடம் இருந்து அசோக் சிங்வி ரூபாய் 2.55 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்குக் கிடைத்த தகவலையடுத்து, உதய்ப்பூர், பில்வாரா ஆகிய நகரங்களில் மூன்று இடங்களில் நேற்று முன்தினம் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
இதுதொடர்பாக நிலக்கரித் துறை கூடுதல் இயக்குநர் பங்கஜ் கெலாட், மூத்த பொறியாளர் பி.ஆர்.அமேதா, பட்டயக் கணக்காளர் ஷியாம் சிங் சிங்வி, இடைத்தரகர்களாக செயல்பட்ட சஞ்சய் சேத்தி, ரஷீத் கான் ஆகியோர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
பின்னர், ஜெய்ப்பூரில் மருத்துவமனை சாலையில் உள்ள அசோக் சிங்கிவியின் வீட்டில் புதன்கிழமை இரவு சோதனை நடத்தப்பட்டது. அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. இதையடுத்து, அசோக் சிங்வி நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அவருடைய வீட்டில் இருந்து சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக நேற்று போலீசார் தெரிவித்திருந்த நிலையில் கனிமவளத் துறை முதன்மைச் செயலரும், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான அசோக் சிங்வியை பணியிடை நீக்கம் செய்து ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அவருடன், உதய்பூர் பகுதியின் கனிமவளத் துறை கூடுதல் இயக்குனர் பங்கஜ் கெலாட், மற்றும் பில்வாரா பகுதியின் மூத்த சுரங்கப் பொறியாளர் பி.ஆர். அமேதா ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications