ஐ.ஏ.எஸ் அதிகாரி மரணம்: கர்நாடக சட்டசபையை முடக்கிய எதிர்கட்சிகள்.. இரவிலும் உள்ளேயே தூங்கினர்!
பெங்களூரு: ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கர்நாடக சட்டசபையில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலை அடுத்து வழக்கை புலனாய்வு காவல்துறைக்கு மாற்றி முதல்வர் சித்தராமைய்யா உத்தரவிட்டுள்ளார்.
நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான டி.கே.ரவி, கோரமங்களாவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் மின்விசிறியில் கடந்த திங்கட்கிழமையன்று உயிரிழந்த நிலையில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.

உள்ளிருப்பு போராட்டம்
மணல் கொள்ளை, ஊழலுக்கு எதிராக செயல்பட்டதால் அவருக்கு எதிர்ப்பு அதிகமாக இருந்துள்ளது. கொலை மிரட்டல்களும் வந்துள்ளன. எனவே, ரவி மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கர்நாடக சட்டசபையில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முடக்கிய எதிர்கட்சிகள்
நேற்று இரவு (செவ்வாய்க்கிழமை) முழுதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரவைக்குள்ளேயே தங்கினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த பாஜக ஆட்சி காலத்தில் இதேபோல ஒரு போராட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டதற்கு பதிலடி தரும் விதமாக பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டசபையினை முடக்கியுள்ளனர்.
மக்கள் கேட்கிறார்கள்
ரவியின் மரணத்திற்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையல்ல... இது மக்களின் கோரிக்கையாகும் என்று எதிர்கட்சியினர் அப்போது முழக்கமிட்டனர். நாங்கள் அரசுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை ஆனால் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்கின்றனர் எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள்.
சிஐடி விசாரணை
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலை அடுத்து வழக்கை புலனாய்வு காவல்துறைக்கு மாற்றி முதல்வர் சித்தராமைய்யா உத்தரவிட்டார். ஆனாலும், அதனை ஏற்க மறுத்த பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.க்கள் இன்றும் சட்டசபைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications