50 கிலோ வெடிகுண்டுகள் பறிமுதல் எதிரொலி- சத்தீஸ்கரில் சோனியா, மோடி பிரசாரத்துக்கு பலத்த பாதுகாப்பு!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 50 கிலோ வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் அங்கு நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோரது தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இம்மாதத்தில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று மோடி, சோனியா ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர்.

முன்னதாக மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள தண்டேவடா பகுதியில் 50 கிலோ எடையுள்ள 2 வெடிகுண்டுகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். பின்னர் அவற்றை பாதுகாப்பான இடத்தில் செயலிழக்கச் செய்தனர்.
தற்போது வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட அதே இடத்தில்தான் 2010ஆம் ஆண்டு பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் பெரும் தாக்குதலை நடத்தினர். அதில் 76 பாதுகாப்புப் படையினர் பலியாகினர்.
இந்த பகுதிகளில்தான் இன்று மோடியும் சோனியாவும் பிரசாரம் மேற்கொண்டனர். மாவோயிஸ்டுகளின் பகுதி என்பதாலும் 50 கிலோ வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாலும் இருவரது பொதுக்கூட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications