தெலுங்கு தேச எம்.எல்.ஏ-க்கள் என் கட்சிக்கு வந்தால் தகுதி நீக்கம் செய்யுங்கள்.. ஜெகன் மோகன் அதிரடி
விஜயவாடா: தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.எ.க்கள் யாரவது தங்களது கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு வந்தால் அவர்களை உடனே தகுதி நீக்கம் செய்து விடுமாறு சபாநாயகரிடம் கூறியுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெருவெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. தொடர்ந்து ஆந்திர சட்டபேரவையில் புதிய சபாநாயகரை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்றது. இதில், ஒய்எஸ்ஆர் காங்கிரசை சேர்ந்த தம்மிநேனி சீதாராம் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் புதிதாக தேர்வு செய்யப்பட சபாநாயகரை அவரது இருக்கையில் அமரவைக்கும் சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு சபாநாயகரை பாராட்டிப் பேசிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி 6 முறை எம்எல்ஏ.வாகவும், பல துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்க தம்மிநேனி சீதாராம் ஆந்திர சட்ட பேரவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார் ஜெகன் மோகன் ரெட்டி
மேலும் பேசிய ஜெகன் இங்கு, கடந்த காலத்தில் எதெல்லாம் நடக்கக் கூடாதோ, அதெல்லாம் நடந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அவதூறாக பேசப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்ட நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரசை சேர்ந்த 67 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். அவர்களில் 23 பேரை தெலுங்கு தேசம் விலை கொடுத்து வாங்கி, ஆளுங்கட்சி இருக்கையில் அமரவைத்தது. மேலும் அவர்களில் 4 பேருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. அப்போது, கட்சி மாறியவர்களை தகுதி நீக்கம் செய்யும் படி நாம் விடுத்த கோரிக்கை நிராகரித்துவிட்டனர்.
ஆனால் நடந்து முடிந்த இந்த தேர்தலில் அதே 23 எம்எல்ஏ.க்கள், 3 எம்பிக்களை மட்டுமே அக்கட்சிக்கு கடவுள் வழங்கியுள்ளார். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள அவர்களில் 5 பேரை நாம் இணைத்துக் கொண்டால், தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என, என்னிடம் எங்கள் கட்சி உறுப்பினர்கள் கூறினார்
ஆனால் அவர்கள் செய்த தவறை நான் செய்ய மாட்டேன். தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து யாராவது வருவதாக இருந்தால் கூட எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு இங்கு வந்தால் வரட்டும். அப்படி செய்யாமல் சட்ட மன்ற உறுப்பினராகவே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் சபாநாயகர் தம்மிநேனி சீதாராம் தானாக முன்வந்து, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பேசினார்.
ஜெகன் இவ்வாறு பேசியபோது, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் பேரவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications