22 கோடீஸ்வரர்களை மோடி உருவாக்கினார்! நாங்களோ கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதியாக்க போகிறோம்: ராகுல்
ராஞ்சி: பிரதமர் மோடி வெறும் 22 கோடீஸ்வரர்களை மட்டுமே உருவாக்கினார். ஆனால் நாங்களோ கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதியாக்க போகிறோம் என்று ஜார்க்கண்டில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
நாட்டின் 18 வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், 3-ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது. இன்னும் 4 கட்ட தேர்தல் பாக்கியிருப்பதால் அனல் பறக்கும் பிரசாரம் நீடித்து வருகிறது. அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது. பாஜகவும் ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது. காங்கிரஸ், பாஜக இடையே கடும் கருத்து மோதலும் ஈடுபட்டு வருகிறது.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பரம்பரை வரி விதித்து சாமானிய மக்கள் வாழ்நாள் எல்லாம் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை பறித்து விடும் என்று காட்டமாக பேசினார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இல்லாத வாக்குறுதியை இருப்பதாக கூறி மோடி பேசுவதாக காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்தது.
அதேபோல், கடந்த வாரம் ஒடிசாவில் பேசிய ராகுல் காந்தி, "பிரதமர் மோடி ஏழைகளிடம் இருந்த பணத்தை பறித்து, 22 கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை மோடி தள்ளுபடி செய்துள்ளார். பாஜக ஆட்சியில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மட்டுமே உயர்ந்தது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி பேரை லட்சாதிபதி ஆக்குவோம்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று ஜார்க்கண்டில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். ராகுல் காந்தி பேசியதாவது:- பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நீர், வனம், நிலங்களை கார்ப்பரேட் தொழிலதிபர்களுக்கு தாரைவார்த்து கொடுக்க மோடி விரும்புகிறார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதியாக்கும். அரசியல் அமைப்பை, ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழைகள், பழங்குடியின மக்களையும் காப்பாற்றுவதுதான் இந்த தேர்தலில் நோக்கமாக உள்ளது. நாட்டில் உள்ள 14 - 15 தொழிலதிபர்களுக்கு வளங்களை கொடுக்க மோடி நினைக்கிறார்.
10 ஆண்டுகளில் 22 பேரை கோடீஸ்வரர்கள் ஆக்கியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும்" என்றார்.
-
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
ஸ்டாலினின் கையில் அந்த சர்ப்ரைஸ் லிஸ்ட்.. திமுக துரைமுருகன் முதல் பொன்முடி வரை! 15 விஐபிகளுக்கு கிலி? -
மக்களவையில் டென்ஷன்: சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! இன்று அரங்கேறும் அக்னிப்பரீட்சை -
கள்ள நோட்டு கும்பல் கைது.. களத்தூரில் குடிசைகள் தீ வைப்பு.. காமராஜின் 10 ஆண்டுகால ஆட்சி! -
திடீரென மயங்கி விழுந்த கிரிஷ் சோடங்கர்.. கைத்தாங்கலாக தூக்கி வந்த காங்கிரஸ் நிர்வாகிகள்! -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
பாஜக எதிர்ப்பில் மென்மை போக்கு.. விஜய் கையாண்ட மோசமான யுக்தி.. காங்கிரஸ் கூட்டணிக்கு வராததன் பின்னணி -
புதுச்சேரி கூட்டணியில் குஸ்தி.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களில் தனித்து போட்டி.. திமுக ஷாக்! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி











Click it and Unblock the Notifications