நானா இருந்தா பாகிஸ்தானிலேயே இருக்க விரும்புவேன்...: இந்திய பெண் கீதாவை அதிர வைத்த சல்மான்

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாகிஸ்தானிலேயே இருக்க வேண்டியது தானே. உங்கள் இடத்தில் நான் இருந்தால் இந்தியாவுக்கு திரும்பி வர மாட்டேன் என பாகிஸ்தானில் இருக்கும் இந்திய பெண் கீதாவிடம் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத கீதா 8 வயதாக இருக்கையில் பாகிஸ்தானின் லாகூருக்கு சென்ற ரயிலில் அனாதையாக இருந்தார். அவரை ராணுவத்தினர் காப்பாற்றினர். இதையடுத்து அவர் கராச்சியில் உள்ள எத்ஹி அறக்கட்டளை நடத்தும் இல்லத்தில் முஸ்லீம் தம்பதியின் பராமரிப்பில் விடப்பட்டார். 14 ஆண்டுகளாக அவரை எத்ஹி குடும்பத்தார் தான் கவனித்து வருகிறார்கள். இந்நிலையில் கீதாவுக்கு இந்தியாவுக்கு வந்து தனது பெற்றோருடன் வாழ ஆசை வந்துள்ளது.

If I were you, I would have never wanted to return to India: Salman tells Geeta

கீதாவுக்கு அவரது பெற்றோர் எங்கு உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் ஆங்கில சேனலின் நிகழச்சி மூலமாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் கீதாவுடன் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

கீதாவை இத்தனை ஆண்டுகளாக கவனித்து வரும் பில்கிஸ் பீபிக்கு நான் முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கீதாவை நீங்கள் உங்களின் குழந்தையை போன்று கவனித்துள்ளீர்கள் என்பதை அவரை பார்க்கையில் தெரிகிறது. அவர் நாடு திரும்பியதும் அவரது பெற்றோரும் அவரை அன்பாக பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம் என்றார்.

நீங்கள் ஏன் உங்கள் மகள் கீதாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப விரும்புகிறீர்கள் என்று சல்மான் பில்கிஸ் எத்ஹியிடம் கேட்டார். அதற்கு கீதா சைகையில் கூறுகையில், பாகிஸ்தானில் நான் ஒன்றுமே இல்லை. அதனால் இந்தியாவுக்கு வர விரும்புகிறேன் என்றார்.

நான் உங்களின் இடத்தில் இருந்தால் கீதா, நான் இந்தியாவுக்கு திரும்பி வர விரும்பமாட்டேன். பாகிஸ்தானிலேயே இருக்க விரும்புவேன் என்றார் சல்மான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+