மோடி மீண்டும் வந்தால் இதுதான் இந்தியாவுக்கு கடைசி தேர்தல்.. கெலாட்
ஜெய்ப்பூர்: மோடி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் இதுதான் இந்தியாவுக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு மோடி என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர் கெலாட் அவர் மீண்டும் வெற்றி பெற்றுவிட்டால் மீண்டும் தேர்தலே நடக்காத அளவில் நாட்டை கொண்டு செல்வார். எப்படி சீனா ரஷ்யா போன்ற நாடுகள் இப்போது இருக்கிறதோ அது போல இனிமேல் இந்தியாவிலும் தேர்தல் நடைபெறாது என்றார் அவர்.

நமது நாடும் நாட்டின் ஜனநாயகமும் பெரும் ஆபத்தில் உள்ள்ளது என்று அச்சம் தெரிவித்த அசோக் கெலாட் ஜனநாயகம் என்பதே சகிப்புத்தன்மை கொண்டது. ஆனால் பாஜக தலைவர்களுக்கு சகிப்புத்தன்மை என்பதே கிடையாது அவர்களுக்கு பொறுமையும் இல்லை, அவர்கள் தங்களிடம் யாரும் கேள்வி கேட்பதை விரும்புவதில்லை. பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவர்கள் மரபணுவிலேயே இல்லை என்றும் அசோக் கெலாட் காட்டமாக கூறினார். மோடிக்கு தான் பதவிக்கு வரவேண்டும் என்பது மட்டுமே அவரது இலக்கு. அந்த இலக்கை அடைய என்ன வேண்டுமென்றாலும் செய்வார் மோடி என்றும் தெரிவித்தார். பதவியை அடைய போர் செய்வது தவறானது என்று தெரிந்தாலும் பாகிஸ்தானுடன் போருக்கு செல்வார்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் ஆதரவை பெற வெளிநாட்டு தூதரகங்களை தவறாக பயன்படுத்தி வருகிறார். ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையில் நாட்டை கொண்டு செல்லலும் மோடி எதிர்காலத்தில் பிரதமராக யார் வரவேண்டும், குடியரசுத் தலைவராக யார் வரவேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள், சீனா ரஷ்யா ஆகிய நாடுகளில் என்ன நடக்கிறதோ அதுவே இனிமேல் இந்தியாவிலும் நடக்கும் என்றும் கூறினார்
சில நாட்களுக்கு முன்னர் பாஜக எம்.பியும் சாமியாருமான சாக்ஷி மகராஜ் பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது இந்த ஒரு தேர்தலுக்குதான் நாம் பாடுபடவேண்டும். கடந்த முறை நாடு முழுவதும் வீசிய மோடி அலை இப்போது சுனாமியாக மாறியுள்ளது மோடி மீண்டும் பிரதமர் ஆகிவிட்டால் இனிமேல் இந்தியாவில் தேர்தலே நடைபெறாது என்று கூறியிருந்தது குறிப்பிட தகுந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications