தமிழக வன்முறை.. தலைமைச் செயலாளரிடம் விளக்கம் கேட்கிறது மத்திய அரசு
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி வருவதால் ஆங்காங்கே அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக தலைமைச் செயலாளரிடம் இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்
டெல்லி: தமிழகம் முழுவதும் ஏழாவது நாளாக இன்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், இன்று போராட்டத்தை கைவிட வேண்டும் என போலீசார் வற்புறுத்தியும் போராட்டக்காரர்கள் மறுத்த காரணத்தால் அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி வருகிறது. சில இடங்களில் கண்ணீர் புகை குண்டு வீசினார்கள்.
போலீசார் நடத்திய தடியடியில் சென்னை, மதுரை, அலங்காநல்லூர், கோவை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் சென்னையில், திருவல்லிக்கேணியில் மர்மநபர்கள் தீயிட்டு கொளுத்தினார்கள். அதைத் தொடர்ந்து சில இடங்களில் டயர்களில் தீவைத்துக் கொளுத்தினார்கள். இப்படி தீவைப்பு, தடியடி, கல்லெறிதல் என தமிழ்நாடு போர்க்களமாக காட்சி அளிக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் நிலவி வரும் சூழ்நிலைகளையும் கலவரங்களையும் சட்டம் ஒழுங்கு நிலையையும் உன்னிப்பாக கவனித்து வருவதாக வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழக தலைமைச் செயலாளரிடம் இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிலைமை சீரடையவில்லை எனில், மத்திய பாதுகாப்பது படை அனுப்பப்படும் என்றும் அதற்காக படைகள் தயாராக உள்ளன எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு துரித கதியில் மத்திய படைகளை அனுப்பி ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களைத் தடுப்பதாக கூறி ஆதிக்கம் செலுத்த துடிக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications