மிட்நைட் 12 மணிக்கு கதவைத் தட்டினாலும் உங்க பிரச்சனையை நான் கேட்பேன்.... முஸ்லிம் தலைவர்களிடம் மோடி!
டெல்லி: மதத்தின் பெயரில் மக்களைப் பிரிக்கும் அரசியல் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்று தம்மை சந்தித்த முஸ்லிம் தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
டெல்லியில் இமாம் அமைப்புகளின் தலைவர் உமர் அகமது இலியாசி தலைமையில் 30 முஸ்லிம்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தது.
இந்த சந்திப்பின் போது முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் இலியாசி கூறியதாவது:

மதத்தின் பெயரில் மக்களைப் பிரிக்கும் அரசியல் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என பிரதமர் கூறினார். முஸ்லிம்கள் தங்களது பிரச்சனைக்காக நள்ளிரவு 12 மணிக்கு கூட தன் வீட்டு கதவை தட்டலாம் என்றும் அவர் உறுதி அளித்தார்.
அத்துடன் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற அரசியலால் நாம் இழந்தது அதிகம் என்றும் மோடி சுட்டிக்காட்டினார். அனைத்து பிரச்சனைகளுக்குமே வளர்ச்சியும் வேலைவாய்ப்பும்தான் தீர்வாக இருக்கும்; அவற்றை நோக்கித்தான் தமது அரசு செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இவ்வாறு இலியாஸ் கூறினார்.
இந்த குழுவில் இடம்பெற்றிருந்த சுதந்திரப் போராட்ட தலைவர்களில் ஒருவரான மெளலானா அபுல் கலாம் ஆசாத்தின் கொள்ளுப் பேரன் பெரோஷ் அகமது கூறுகையில், நாங்கள் ஒரு பிரதமரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே இல்லை. ஒவ்வொருவரையும் அவர் தனித்தனியாக சந்தித்து விசாரித்தார். நாட்டின் அனைத்து மதத்தினருக்குமான ஒரு பிரதமராகவே மோடி தம்மை கருதிக் கொள்கிறார். அவர் இந்தியா என்கிற ஒற்றை அடையாளத்தைத்தான் முன்வைக்கிறார் என்றார்.
மேலும் இச்சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவின் மகன் பர்வேஷ் அகமது, அஜ்மீத் தர்கா ஷரீப் மற்றும் பெங்களூர், குஜராத், ஜெய்பூர், மீரட், பாட்னா இமாம்கள் கலந்து கொண்டனர்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications