தீவிரவாதத்தை நிறுத்துங்கள் இல்லையெனில் தண்ணீரை நிறுத்துவோம்.. பாகிஸ்தானுக்கு நிதின்கட்கரி வார்னிங்!
அமிர்தசரஸ்: தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பாஜக வேட்பாளர் ஹர்தீப் பூரிக்கு ஆதரவாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது மத்திய அரசு ஆறு அணைகளை கட்ட திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நீடிக்கும் தண்ணீர் பிரச்சனையை தவிர்க்கும் வகையில் அணைகளை கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார்.

தண்ணீர் ஒப்பந்தம்
இந்தியா பாகிஸ்தான் இடையே 1960ஆம் ஆண்டு நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் இருந்து 3 நதிகள் மூலம் பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியான உறவுடனும் நட்புடனும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

வேறு வழியில்லை
ஆனால் அது முற்றிலும் மறைந்து போய்விட்டது. பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால், பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரை நிறுத்துவதை தவிர நமக்கு வேறு வழியே இல்லை. அதற்கான ஆரம்பகட்ட ஆய்வுப் பணிகளை இந்தியா துவங்கி உள்ளது.

நீண்ட நேரம் ஆகாது
பாகிஸ்தான் தனது தீவிரவாத முகத்தை மாற்றாவிட்டால் இந்தியா பாகிஸ்தானுக்கு நதி நீரை நிறுத்துவதற்கான கடுமையான முடிவை எடுக்க நீண்ட நேரம் ஆகாது.அந்த நதிகளின் நீர் அரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு செல்லும். இதனால் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விவசாயத்திற்கான தண்ணீர் பற்றாக்குறை தீர்க்கப்படும்.

காங். செய்யாத வேலை
பஞ்சாப்பிற்கும் அண்டை மாநிலமான ஹரியானவிற்கும் இடையேயான தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படும். கடந்த 50 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாத அபிவிருத்தி வேலைகளை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது செய்யப்பட்டுள்ளது.

பயண நேரம் குறையும்
அமிர்தசரஸ் உள்ளிட்ட 6 நகரங்களில் இரட்டை அடுக்கு ஏர் பஸ் சேவையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தொழில் மற்றும் வர்த்தக யூனியனை ஊக்குவிப்பதற்காக, டெல்லி-அமிர்தசரஸ்-கட்ரா எக்ஸ்பிரஸ்வே திட்டத்தை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, இது அமிர்தசரஸ்க்கும் டெல்லிக்கும் இடையில் நான்கு மணி நேர பயணத்தை குறைக்கும். இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications