அசைவம் சாப்பிட்டதால்தான் இமாச்சலில் மேகவெடிப்பு, நிலச்சரிவு ஏற்பட்டது! விஷத்தை கக்கிய ஐஐடி இயக்குநர்
சிம்லா: அசைவம் சாப்பிடுபவர்கள் நல்ல மனிதர்களே கிடையாது, அவர்களால்தான் இமாச்சலில் நிலச்சரிவு, மேகவெடிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டது என அந்த மாநிலத்தில் மண்டியில் உள்ள ஐஐடி இயக்குநர் லட்சுமிதர் பெஹேரா தெரிவித்துள்ளார்.
இமாச்சல் பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மேகவெடிப்பு காரணமாக தொடர்ந்து கனமழை கொட்டியது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை காரணமாக அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மோசமான மழையால் 752 சாலைகள் மூடப்பட்டன. சிம்லாவின் சம்மர் ஹில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிவன்கோயில் அப்படியே புதைந்துவிட்டது. இந்த கோயிலில் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்த போது ஏற்பட்ட நிலச்சரிவால் பலர் சிக்கிக் கொண்டனர்.
இடிபாடுகளில் இருந்து 7 சடலங்கள் மீட்கப்பட்டன. மண் குவியல்களிலும் நிறைய பேர் சிக்கியதாக சொல்லப்படுகிறது. செக்லி பஞ்சாயத்தில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகிவிட்டனர். இப்படி இமாச்சலில் நிலச்சரிவு மற்றும் மேகவெடிப்பில் சிக்கி இதுவரை 51 பேர் பலியாகிவிட்டனர்.
இந்த நிலையில் இமாச்சலில் மண்டியின் ஐஐடி இயக்குநர் லட்சுமிதர் பெஹோரா ஒரு விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் நேற்று நடந்த விழாவில் பேசுகையில் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
அதற்கு மாணவர்கள் விழிக்க ஐஐடி இயக்குநரோ அசைவம் சாப்பிடுவதை நிறுத்துங்கள் என கூறிய அவர் இனி அசைவம் சாப்பிட மாட்டேன் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளுமாறு கேட்டார். மேலும் அவர் தொடர்கையில் நீங்கள் விலங்குகளை மாமிசத்திற்காக கொன்றால் இமாச்சலில் கணிசமான அழிவை சந்திக்கும்.
மாமிசத்திற்காக விலங்குகளை அழித்தல் என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதை போன்றது. இது போன்ற நிலச்சரிவுகளும் மேகவெடிப்புகளையும் நீங்கள் மீண்டும் பார்ப்பீர்கள். இந்த பாவத்தின் விளைவுதான் இந்த இயற்கை பேரழிவு. இவ்வாறு பெஹேரா கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
அதில் ஒருவர் மாமிசம் சாப்பிடுவதால் இமாச்சலில் நிலச்சரிவு ஏற்படவில்லை. திட்டமிடப்படாத கட்டுமானம், காட்டை அழித்தல், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவைகளால்தான் நிலச்சரிவு, மேகவெடிப்பு போன்றவை ஏற்பட்டது என ஒரு நெட்டிசன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications