உதவியாளரை பலாத்காரம் செய்த ஐஐடி கவுஹாத்தி பேராசிரியர்: டிராபிக் ஜாமில் போலீசில் சிக்கினார்
கவுஹாத்தி: ஐஐடி கவுஹாத்தியில் பணிபுரியும் மூத்த பேராசிரியரான ஆலோக் குமார் கோஷல் அலுவலக உதவியாளராக இருக்கும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள ஐஐடியில் மூத்த பேராசிரியராக இருப்பவர் ஆலோக் குமார் கோஷல். அகாடமிக் விவகாரத் துறை டீனாகவும் உள்ளார். அவர் தனது அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சம்பவம் நடந்ததில் இருந்து அந்த பெண் வேலைக்கு வரவில்லை. இந்நிலையில் சம்பவம் நடந்து 10 நாட்கள் கழித்து அவர் பான்பஜார் காவல் நிலையத்தில் ஆலோக் மீது பலாத்கார புகார் தெரிவித்தார்.

அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆலோக்கை கைது செய்ய ஐஐடி வளாகத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்றனர். ஆனால் போலீசார் வந்ததை பார்த்த ஆலோக் காரில் ஏறி தப்பியோடினார். போலீசார் அவரை துரத்திச் சென்றனர்.
இந்நிலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆலோக் காரில் இருந்து இறங்கி தப்பியோட முயன்றார். ஆனால் அதற்குள் போலீசார் அவரை கைது செய்தனர். கடந்த 2003ம் ஆண்டு ஐஐடி கவுஹாத்தியில் சேர்ந்த ஆலோக் தனது மகனுடன் கல்லூரி வளாகத்தில் இருக்கும் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
பலாத்கார சம்பவத்தை அடுத்து ஆலோக் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் டீனாகவும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications