இரவு நேரம்.. ஐஐடி கவுகாத்தியில் மாணவி பலாத்காரம்.. பலாத்காரம் செய்த மாணவருக்கு ஜாமீன்..!

கவுகாத்தி ஐஐடி மாணவியை பலாத்காரம் செய்தவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது

Subscribe to Oneindia Tamil

கவுகாத்தி: ஐஐடி மாணவியை அதே கல்லூரியை சேர்ந்தோர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கவுகாத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதில் தொடர்புடைய பிடெக் மாணவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 28ம் தேதியன்று இரவு ஐஐடி கவுகாத்தியில் ஒரு மாணவியை அதே கல்லூரியை சேர்ந்த மாணவர் பாலியல் பலாத்காரம் செய்தார்..

இரவு நேரத்தில் அந்த பகுதியில் யாருமில்லாததால், விவகாரம் மறுநாள் காலைதான் வெளியே தெரிந்தது.. சம்பவ இடத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்த மாணவி மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..

.

பலாத்காரம்

பலாத்காரம்

போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர்.. இறுதியில் மாணவிக்கு பலாத்காரம் செய்தது பல நாள் டார்ச்சர் தந்த அதே கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்ததையடுத்து, ஏப்ரல் 3-ம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர்.. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட மாணவர் ஜாமீன் கோரி கவுகாத்தி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.. இது தொர்பான வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடந்து வந்தது..

 ஐஐடி வளாகம்

ஐஐடி வளாகம்

இறுதியில் இது தொடர்பாக ஐஐடி கவுகாத்தியின் நீதிபதி அஜீத் போர்த்தக்கர் கூறும்போது, ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது.. பாதிக்கப்பட்ட மாணவியாகட்டும், குற்றம் சாட்டப்பட்ட மாணவராகட்டும், ரெண்டு பேருமே மாநிலத்தின் எதிர்கால சொத்துக்கள்.. ஐஐடி, கவுகாத்தியில் ஐடிடியில் படிக்கும் திறமையான மாணவர்கள்.. குற்றம் சாட்டப்பட்டவர்களை தொடர்ந்து காவலில் வைத்திருப்பது அவசியமற்றது..

குற்றப்பத்திரிகை

குற்றப்பத்திரிகை

மாணவிக்கு 19 வயது, மாணவருக்கு 21 வயது.. இருவருமே வேறு வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள்... குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள சாட்சிகளின் பட்டியலை ஆராய்ந்து பார்த்தால், குற்றம் சாட்டப்பட்டவர் தங்கள் சான்றுகளை சேதப்படுத்த முடியாது.. அதேபோல, ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களை பாதிக்கும் வாய்ப்பும் இல்லை.. எனவே, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூ.30,000 பிணைபத்திரத்துடன் ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறேன்" என்றார்.

 சொத்து

சொத்து

பாலியல் பலாத்காரம் செய்த மாணவரை, "மாநிலத்தின் எதிர்கால சொத்து" என்று கூறி கவுகாத்தி ஹைகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது... கடந்த 2017, பிப்ரவரியில் ஐஐடி கவுகாத்தி மாணவர்கள் 2 பேர் கவுகாத்தி பல்கலைக்கழக மாணவிகள் 3 பேரை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+