ஐஐடி மாணவர்கள் எல்லாம் பக்கா சுயநலவாதிகள்: கட்ஜு விளாசல்
டெல்லி: ஐஐடியில் படிப்பவர்கள் எல்லாம் சுயநலவாதிகள் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
பாம்பே ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு மாணவர்களிடையே உரையாற்றினார். சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட கட்ஜு கூறியது மாணவ-மாணவிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அவர் பேசுகையில், ஐஐடியில் படிப்பவர்கள் எல்லாம் சரியான சுயநலவாதிகள். அவர்களுக்கு தேசப்பற்று என்பதே கிடையாது. அவர்களுக்கு நாட்டின் மீது உண்மையான அக்கறை இல்லை என்றார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சுயநலம்
ஐஐடி மாணவர்களில் பலருக்கு நாட்டின் மீது உண்மையான பற்று இல்லை. நீங்கள் சரியான சுயநலவாதிகள்.

அமெரிக்கா
உங்களுக்கு அமெரிக்காவுக்கு செல்வது தான் முக்கிய நோக்கம். முதலில் எம்.டெக். படிக்க அமெரிக்கா செல்கிறீர்கள். அதன் பிறகு அங்கேயே செட்டில் ஆகி சொகுசாக வாழ்கிறீர்கள்.

வரி
ஐஐடியில் உங்கள் கல்விக்கு கிடைக்கும் மானியம் இந்தியாவில் வரி செலுத்துபவர்களின் பணம் மூலம் கிடைக்கிறது. உங்கள் கல்விக்கு இந்தியர்களாகிய நாங்கள் பணம் செலுத்திய பிறகு உங்களின் அறிவால் மேம்பாடு அடைய அமெரிக்கா, ஐரோப்பா உங்களை அழைத்துக் கொள்கிறது.

உயர் கல்வி
மேற்கத்திய நாடுகளில் உயர் கல்விக்கு அதிகம் செலவாகும். அப்படி இருக்கையில் மேற்கத்தியர்கள் எங்களின் சிறந்த மூளைகளை எடுத்துக் கொள்கிறார்கள். எங்கள் செலவில் அவர்கள் சேமிக்கிறார்கள்.
|
என்.ஆர்.ஐ.
அமெரிக்காவில் செட்டில் ஆகி நீங்கள் என்.ஆர்.ஐ.க்களாகி விடுகிறீர்கள். உங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என எது நல்லது எது கெட்டது என இந்தியர்களுக்கு கூறுகிறீர்கள்.












Click it and Unblock the Notifications