தமிழகத்தில் 8-ஆம் தேதி வரை கனமழை... 4 மாநில மீனவர்களுக்கு எச்சரிக்கை!
Recommended Video

டெல்லி: தமிழகத்தில் 8-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும் 4 மாநில மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

தமிழகத்தின் திருவாரூர், நாகை, நாகூர்,கொரடாச்சேரி, மாங்குடி, கங்களாஞ்சேரி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. சென்னையிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
[ஒரே நாளில் 25 செ.மீ மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி? ]
இந்நிலையில் இலங்கை அருகே வளிமண்டலத்தில் சுழற்சி நிலவுகிறது. இதனால் வரும் 8-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அக்டோபர் 7-ஆம் தேதி தமிழகத்தின் பல மாவட்டங்களில் 25 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்யக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வரும் 8-ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, கேரளம், லட்சத்தீவு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications