தேர்வு எழுதியது 12,000 பேர், தேர்ச்சி பெற்றதோ 20,000 பேர்: இந்த கூத்து ஆக்ராவில்
ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் உள்ள அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் 12 ஆயிரத்து 800 பேர் பி.எட். தேர்வு எழுதிய நிலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி அடைந்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அம்பேத்கார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்து 800 பேர் பி.எட். தேர்வு எழுதியுள்ளனர். ஆனால் 20 ஆயிரத்து 89 பேர் தேர்ச்சி அடைந்துள்ளது பல்கலைக்கழக அதிகாரிகளையே வியக்க வைத்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் மனோஜ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,
12 ஆயிரத்து 800 பேர் தேர்வு எழுதியுள்ள நிலையில் 20 ஆயிரத்து 89 பேர் எப்படி தேர்ச்சி பெற்றிருக்க முடியும் என்பது குறித்து விசாரணை நடத்த பல்கலைக்கழக துணை வேந்தர் வி.சி. முகமது முஜம்மில் குழு ஒன்றை அமைத்துள்ளார்.
12 ஆயிரத்து 800 பேர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் படித்துள்ளனர். மீதமுள்ள 7 ஆயிரம் மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் படித்துள்ளனர். பி.எட். தேர்வு முடிவுகளை தயார் செய்த தனியார் ஏஜென்சி தன்னிடம் 12 ஆயிரத்து 800 பேரின் தகவல்கள் மட்டுமே உள்ளது என்று கூறியபோது தான் இது குறித்து தெரிய வந்தது.
தனியார் கல்லூரிகள் தங்களிடம் கூடுதல் இருக்கைகள் இருப்பதாகக் கூறி அதிக மாணவர்களை சேர்த்துள்ளது. அவ்வாறு சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களும் தேர்வு எழுதியுள்ளனர். இது குறித்து விளக்கம் கேட்டு அனைத்து தனியார் கல்லூரிகளுக்கும் முஜம்மில் கடிதம் அனுப்பியுள்ளார் என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications