Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

75 வயது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற..10 ஆண்டுகளாக ஆட்டோ டிரைவர் செய்யும் செயல்.. நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

அமராவதி: வீட்டில் தனிமை வாட்டியதால் என்னை விட்டு பிரிந்து செல்லாதே என்று அம்மா சொன்ன ஒரே வார்த்தைக்காக அவரை ஆட்டோவில் தன்னுடனே 10 ஆண்டுகளாக அழைத்து செல்லும் பாச மகன் குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

அம்மா.. யாருக்கு தான் பிடிக்காது? மகன், மகளாக பிறந்த நாம் அனைவரும் அம்மா மீது அளவுக்கடந்த அன்பு வைத்திருப்போம். பாலூட்டி, சோறுட்டி வளர்த்த அம்மாவை கடைசி வரை கண்கலங்காமல் காப்பாற்ற வேண்டும் என்பது தான் அனைவரின் எண்ணமாக உள்ளது.

in-andhra-pradeshs-auto-driver-taking-his-75-year-old-mother-along-on-every-ride-for-the-past-10-ye

இதனால் தான் நம்மில் பலரும் அம்மாவின் ஆசைகளை கேட்டு முடிந்தவரை நிறைவேற்ற துடிக்கிறோம். இன்னும் சிலரோ கைநிறைய சம்பாதிக்கும் சமயத்தில் அம்மா பக்கத்தில் இல்லையே என வருத்தங்களை பதிவு செய்வதும் உண்டு.

அதேபோல் மகன் - மகள்கள் மீது அம்மா வைத்திருக்கும் பாசம் கொஞ்சம் கூட குறைவது இல்லை. பிறந்த தேதியில் இருந்தது கடைசி காலம் வரை ஒவ்வொரு தாயும் தனது மகன், மகள் மீது அளவுக்கடந்த அன்பை வைத்துள்ளனர். இந்த அன்பை யாராலும் அளவிட முடியாது. இந்த அன்பு அளப்பரியது.

இந்நிலையில் தான் அம்மா மீது மகனும், மகன் மீது அம்மாவும் வைத்திருக்கும் பாசத்தை பறைசாற்றும் விதமாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. தாயை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் அவரை தன்னுடனே 10 ஆண்டுகளாக ஆட்டோவில் அழைத்து செல்லும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் எர்ணாகுடம் கிராமத்தை சேர்ந்தவர் மசகா கோபி (வயது 52). இவர் கடந்த 1997 ம் ஆண்டில் இருந்தே ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது தாயின் பெயர் சத்யவதி. வயது 75. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சத்யவதி தனது கணவரை இறந்தார். இந்த இழப்பை சத்யவதியால் தாங்க முடியவில்லை. இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.

கணவர் இறந்த நிலையில் மகன் கோபியை அருகே வைத்து கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் அவர்களின் பொருளாதார சூழல் அதற்கு இடம் கொடுக்கவில்லை. தினமும் கோபி ஆட்டோ ஓட்டினால் தான் அவர்களின் வீட்டில் உணவு சமைப்பதற்கான உலை கொதிக்கும். இதனால் கோபி தினமும் ஆட்டோ ஓட்டியே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதனால் கோபியை நினைத்து சத்யவதி கவலை கொண்டார். கணவர் தான் தன்னை விட்டு இறந்துவிட்டார். மகன் கோபியும் என்னுடன் இல்லையே.. காலை முதல் இரவு வரை ஆட்டோ ஓட்ட செல்கிறானே என்று கவலை கொண்டார். இதனால் அவரால் சரியாக சாப்பிட முடியவில்லை. அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் அவர் பூரண குணமடையவில்லை. தொடர்ந்து மனசோர்வில் இருந்தது.

அப்போது தான் மகன் கோபியிடம், சத்யவதி, ‛‛நான் உன்னுடனே இருக்க வேண்டும்.. எங்கு போனாலும் என்னையும் அழைத்து செல்.. வீட்டில் தனிமையில் இருக்க பிடிக்கவில்லை. உன்னை பற்றிய கவலை அதிகம் இருக்கிறது'' என்று தனது மனதில் இருந்த நீண்டநாள் வேதனையை கூறினார். இதை கேட்டு கண்கலங்கிய கோபி தனது தாய் சத்யவதியை ஆட்டோவில் வைத்தே எங்கும் அழைத்து செல்கிறார்.

ஆஃபர் செல்லும் போதும் கூட கோபி தனது தாய் சத்யவதியை ஆட்டோவில் அழைத்து சென்று வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக மகன் கோபியுடன் ஆட்டோவில் அனைத்து இடங்களுக்கும் பயணித்து வருகிறார் சத்யவதி. மகனை பிரிய கூடாது என நினைக்கும் தாயின் பாசம் ஒருபுறம்.. அம்மாவின் கவலையை போக்க வேண்டும். கடைசி வரை அவரை கண்கலங்காமல் காப்பாற்ற வேண்டும் என்ற மகனின் செயல் இன்னொருபுறம் என்று இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+