போபால் பல்கலை கழக வாளாகத்துக்குள் மாட்டுத்தொழுவம் ... மாணவர்கள் அதிர்ச்சி

போபாலில் உள்ள இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் பல்கலை கழக வாளாகத்தினுள் மாட்டுத் தொழுவம் அமைக்க நிர்வாகம் முடிவெடுத்து டெண்டர் விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

போபால்: போபாலில் உள்ள இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் பல்கலைக்கழக வளாகத்தினுள் மாட்டுத் தொழுவம் கட்ட டெண்டர் விடப்பட்டது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் பல்கலைக் கழகம் ஒன்று உள்ளது. இந்த பல்கலை கழக வளாகத்துக்குள் மாட்டுத் தொழுவம் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது.

In Bhopal Journalism university planned to set up Gaushala in University campus

இதுகுறித்துப் பேசிய நிர்வாகி லஜ்பத் அகுஜா, பல்கலை கழக வளாகத்தில் புதிய கட்டடங்கள் மாணவர்கள் மற்றும் பேராசியர்கள் தங்குவதற்காக கட்டப்படுகிறது. மேலும், மாட்டுத் தொழுவம் அமைக்கப்படும் முடிவு இரண்டு வருடங்களுக்கு முன்பே முதல்வர் சிவராஜ் சௌகானுடன் ஆலோசித்து எடுக்கப்பட்டது என்றார்.

மேலும் இதுகுறித்து பேசிய லஜ்பத், மாட்டுத் தொழுவத்தை பல்கலை வளாகத்தில் அமைத்தால், விடுதிக்குத் தேவையான பால் கிடைக்கும். மாட்டுச் சாணத்திலிருந்து பயோ கேஸ் உற்பத்தி செய்துகொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் இங்கிருக்கும் நிலத்தில் சாணத்தை உரமாக்கி காய்கறி செடி வளர்க்கலாம் என கூறினார்.

ஆனால், இதற்கு மணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பல்கலைக் கழக நூலகத்தில் புத்தகங்கள் இல்லை. மாணவர்கள் கற்கும் வகையில் நல்ல கேமராக்கள் இல்லை. ஆனால் மாட்டுத் தொழுவம் கொண்டு வருவோம் என்று சொல்வது அநியாயம் என மாணவர்கள் குமுறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+