Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ம.பி. விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு- 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி

மத்தியப்பிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்தியப்பிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்கு சிறந்த கொள்முதல் விலை அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்தியப்பிரதேசசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றாம் தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

In Madhya Pradesh 2 farmers dead, 4 injured in police firing

இன்று மான்ட்சவூர் என்ற இடத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது கூட்டத்தை கலைக்க முயன்ற காவல்துறையினர் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 2 விவசாயிகள் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, ரட்லாம், நீமுச், உஜைன் மற்றும் மண்டாசாவூர் பகுதிகளில் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+