பொத்தேரி டூ காட்டாங்குளத்தூர்.. ரயிலை நிறுத்தி கொள்ளையன் திருடியது எப்படி.. 5 கேள்விகளும் பதில்களும்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி ரயில் நிலையம் அருகே சட்டையால் ரயில்வே சிக்னலை மூடி ரயிலை நிறுத்தி பெண் பயணியிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக இளைஞரை கைது செய்துள்ளனர். கடந்த 15-ம் தேதி இரவு நெல்லை நோக்கி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை எப்படி திருடன் நடுவழியில் நிறுத்தி கொள்ளையடித்தான்.. என்பது பற்றி ஐந்து கேள்விகளையும் அதற்கான பதில்களையும் பார்ப்போம்.
பொத்தேரியில் நடந்த சம்பவம் சாதாரண ஒரு குற்றச் சம்பவம்போலத் தெரிந்தாலும், உற்று நோக்கினால் இதில் பல அசாத்தியமான, விசித்திரமான மற்றும் லாஜிக் இடிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஒரு சினிமா பட பாணியில் நடந்துள்ள இந்தச் சம்பவம் பற்ற கேள்வி பதில் வடிவில் பார்ப்போம்

கேள்வி 1: சிக்னல் விளக்கை ஒரு சாதாரண சட்டையால் மூடிவிட முடியுமா? அது எப்படி ரயிலை நிறுத்தப் பயன்படும்?
பதில்: இதுதான மிகவும் அசாத்தியமான விஷயம். ரயில்வே சிக்னல் கம்பங்கள் மிக உயரமாக இருக்கும். மேலும், நவீன சிக்னல் விளக்குகள் (LED/Lamps) பகலிலும் இரவிலும் மிகத் தூரத்திற்குப் பிரகாசமாகத் தெரியக்கூடிய சக்தி வாய்ந்தவை ஆகும். ஒரு நபர் சிக்னல் கம்பத்தின் உச்சிக்கு ஏறி, தன் சட்டையால் அந்தப் பெரிய விளக்கை முழுமையாக மறைப்பது என்பது அத்தனை எளிதல்ல. ஒருவேளை அவர் சிக்னல் கம்பத்தில் ஏறி பச்சையாக எரிந்த விளக்கை மூடியிருந்தாலும், சிக்னல் 'அணைந்துபோனால்' அல்லது சிக்னல் தெரியவில்லை என்றால், ரயில் ஓட்டுநர்கள் பாதுகாப்பு கருதி ரயிலை உடனே நிறுத்த வேண்டும் என்பது ரயில்வே விதிமுறை. அதைத்தான் இந்தத் திருடன் பயன்படுத்தியிருக்கிறான்.
கேள்வி 2: காக்கிச் சட்டையைக் கண்டதும் சிக்னல் என்று ஓட்டுநர் ஏமாந்தாரா? அல்லது சிக்னலை மறைத்ததால் நின்றதா?
பதில்: திருடன் தன் காக்கிச் சட்டையைக் கழற்றி சிக்னலை மறைத்தான் என்று கூறப்பட்டுள்ளது. ரயில்வேயில் 'காக்கி' அல்லது 'சிவப்பு' நிறத் துணிகளைத் தண்டவாளத்திற்கு அருகே அசைத்தால், அது ஆபத்துக்கான சிக்னலாக (Danger Signal) கருதப்பட்டு ரயில்கள் நிறுத்தப்படும். ஆனால், இங்கு சிக்னல் விளக்கின் மீது சட்டையைப் போட்டு மறைத்ததாகக் கூறப்படுவதால், சிக்னல் விளக்கு ஓட்டுநருக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டதே ரயில் நிற்பதற்குக் காரணம்.
கேள்வி 3: அதிவேகமாக வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில், சிக்னல் விழுந்தவுடன் பொத்தேரி நிலையத்திலேயே எப்படி உடனே நிறுத்த முடிந்தது?
பதில்: பொதுவாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் 80-110 கி.மீ வேகத்தில் செல்லும்போது சிக்னல் மாறினால், ரயிலை முழுமையாக நிறுத்த சில நூறு மீட்டர்கள் அல்லது ஒரு கிலோமீட்டர் தூரம் தேவைப்படும்.
ஆனால், நெல்லை எக்ஸ்பிரஸ் தாம்பரம் நிலையத்தைக் கடந்து, வண்டலூர், பொத்தேரி வழியாகச் செல்லும்போது (அதுவும் இரவு நேரத்தில் அடுத்தடுத்து நிலையங்கள் இருப்பதால்) ஓரளவுக்குக் குறைவான வேகத்திலேயே செல்லும். இந்த வழித்தடத்தில் 60 கிமீ வேகத்திற்கு மேல் செல்ல மாட்டார்கள். ஏனெனில் சர்வ சாதாரணமாக மக்கள் தண்டவாளங்களை கடந்து செல்லும் பகுதியாகும். எனவே பொத்தேரி நிலையத்திற்குச் சற்று முன்பே சிக்னல் மறைக்கப்பட்டதை ஓட்டுநர் முன்கூட்டியே கவனித்து ரயிலை பிரேக் போட்டு நிறுத்தியிருக்கலாம்.
கேள்வி 4: ஏசி பெட்டியின் கதவுகள் பொதுவாகப் பூட்டப்பட்டிருக்குமே, திருடன் எப்படி உள்ளே ஏறினான்?
பதில்: நவீன ரயில்களில் மற்றும் ஏசி பெட்டிகளில் பாதுகாப்பு கருதி கதவுகள் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பல நேரங்களில் பயணிகள் காற்றுக்காகவோ, அல்லது அடுத்த ஸ்டேஷன் வரப்போகிறது என்பதற்காகவோ கதவுகளைத் திறந்து வைத்திருப்பதுண்டு. தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏறிய பயணிகள் அப்போது தான் உட்கார்ந்து இருப்பார்கள். முகத்தை கழுவி பிரஸ்ஸாக மாறாக சில நிமிடங்களாவது ஆகும். இந்தச் சம்பவத்திலும் "கதவு திறந்திருந்த ஏ.சி. வகுப்பு பெட்டியில்" தான் திருடன் ஏறியுள்ளார். திருடன் பொத்தேரி காட்டாங்குளத்தூர் இடையே ரயில் குறைவான வேகத்தில் தான் செல்லும்என்பதே முன்கூட்டியே அறிந்துள்ளார். எனவே ரயிலின் வேகக் குறைவையும், திறந்திருந்த கதவையும் சரியாகப் பயன்படுத்தி அசாத்தியமாக உள்ளே நுழைந்திருக்கிறான்.
கேள்வி 5: ரயில் பெட்டிக்குள் பெண் பயணியின் கூச்சல் கேட்டு மற்ற பயணிகள் ஏன் திருடனைப் பிடிக்கவில்லை?
பதில்: இரவு 9.35 மணி என்பதால் ஏசி பெட்டியில் இருந்த பெரும்பாலான பயணிகள் உள்ளே இருந்துள்ளார்கள். மேலும், வாஷ்பேஷன் பகுதி என்பது பெட்டியின் நுழைவாயில் அருகே இருக்கும். திருடன் உள்ளே நுழைந்து, சங்கிலியைப் பறித்து, பெண் கூச்சலிடுவதற்குள், நின்றிருந்த ரயிலில் இருந்து கீழே குதித்து இருட்டில் தப்பி ஓடிவிட்டான். சக பயணிகள் சுதாரிப்பதற்குள் சில நொடிகளில் இந்தச் சம்பவம் நடந்து முடிந்துள்ளது. ரயிலை கொள்ளையடித்த இடத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளால் தான் திருடன் சிக்கியுள்ளான்.
ரயில்வே சிக்னல் அமைப்பையே ஒரு சட்டையை வைத்து ஏமாற்றி, ரயிலை நிறுத்தி, ஏசி பெட்டிக்குள் புகுந்து திருடிய இந்தத் திருடனின் "சினிமாத்தனமான" திட்டம் அசாத்தியமானதுதான். ஆனால், ரயில்வே போலீசார் அதனைவிட அசாத்தியமாக செயல்பட்டதால் குற்றவாளி கம்பி எண்ணி வருகிறார்.














Click it and Unblock the Notifications