Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதலிரவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. கன்னித்தன்மை சோதனை என கணவரின் குடும்பம் செய்த செயல்.. ஷாக்

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் முதலிரவில் பெண்ணின் கன்னித்தன்மையை பரிசோதிப்பதாக கூறி கணவரின் குடும்பத்தினர் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநில இந்தூரை சேர்ந்தவர் இளம்பெண். இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணமாகும்போது பெண்களுக்கு இருக்கும் பயம், பதற்றத்துடனே கணவர் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார் அந்த பெண்.

virginity madhya pradesh

ஆனாலும் கூட திருமண வாழ்க்கையை இனிமையாக அமையும். தனக்கென்று புதிய உறவுகள் கிடைத்துள்ளது. கணவர் மற்றும் அவரது குடும்பம் இனி நம்மை பாதுகாப்பாக பார்த்து கொள்ளும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது.

ஆனால் திருமண வாழ்க்கை என்பது அந்த பெண்ணுக்கு சரியாக அமையவில்லை. தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அதாவது திருமணமான 3 மாதத்தில் அந்த பெண்ணின் கரு கலைந்தது. அதன்பிறகு மீண்டும் அந்த பெண் கர்ப்பமானார். பிறகு 9 மாதத்தில் இறந்த நிலையில் குழந்தை பிறந்தது. இதனால் 2வது முறையாக அவரது வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டது. இருப்பினும் அவர் மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

தற்போது அந்த பெண், தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் அந்த பெண் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது முதலிரவில் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார். முதலிரவின்போது தனது கன்னித்தன்மையை பரிசோதிக்க கணவரின் குடும்பத்தினர் முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அந்த பெண், ‛‛முதலிரவின்போது எனது கன்னித்தன்மையை பரிசோதிக்க எனது கணவரின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக நடைமுறைக்கு சாத்தியமற்ற செயல்களை செய்தனர். இதனால் தான் மனதளவிலும், உடலளவிலும் பிரச்சனைகளை எதிர்கொண்டேன்’’ என்று இந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த இந்தூர் நீதிமன்றம் கணவரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்ய தயாராகி உள்ளனர். மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை கன்னித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் துன்புறுத்தியதாக ஒரு பெண் நீதிமன்றத்தை அணுகி இருப்பது இதுதான் முதல் முறையாகும்.

முன்னதாக இதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரித்து ரகசிய அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் முதலிரவின்போது கன்னித்தன்மை பரிசோதனை என்ற பெயரில் அந்த பெண்ணுக்கு கணவரின் குடும்பத்தினர் சார்பில் தொல்லை அளிக்கப்பட்டது பற்றிய விபரங்கள் கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து தான் சம்பவம் தொடர்பாக கணவரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+