பேன்களில் ஸ்பிரீங், சத்தம் எழுப்பும் சென்சார்.. மாணவர்கள் தற்கொலையை தடுக்க புதிய முயற்சி!
மாணவர்கள் தற்கொலையை தடுக்க ராஜஸ்தான் கல்வி மையங்களில் புதிய கொண்டுவரப்படவுள்ளது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மாணவர்கள் தற்கொலையை தடுக்க கல்வி மைய விடுதிகளில் உள்ள பேன்களில் எடை கூடினால் இறங்கும் வகையில் ஸ்பிரிங்குகளை அமைக்கவும் சத்தம் எழுப்பும் வகையில் சென்சார் கருவிகளை பொருத்தவும் அம்மாநில கல்வி மையங்கள் முடிவு செய்துள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் கல்வி மையங்களுக்கான நுழைவுத் தேர்வு மற்றும் நீட் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பயிலும் மாணவர்கள் தேர்வில் தோல்வியடையும் போது சில சமயங்களில் மனமுடைந்து தங்களது விடுதி அறையில் உள்ள ஃபேன்களில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் 17 மாணவர்கள் இங்கு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அதிகபட்சமாக 2014-ம் ஆண்டில் 45 மாணவர்கள் தேர்வில் ஏற்பட்ட தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து ராஜஸ்தான் மாநில அரசு மாணவர்களின் தற்கொலையை தடுப்பது தொடர்பாக வழிமுறைகளை உருவாக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் அந்நகரில் உள்ள பயிற்சி மைய மாணவர்கள் விடுதி அறையில் உள்ள ஃபேன்களில் தூக்கு மாட்டி தற்கொலை செய்வதை தடுக்கும் விதமாக, ஃபேனில் ஸ்பிரிங் மற்றும் ரகசிய சென்சார் பொருத்தப்பட உள்ளதாக பயிற்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 கிலோவுக்கு அதிகமான எடை பேனில் தொங்கும் போது ஸ்பிரிங் தானாக செயல்பட்டு பேனை கீழ் நோக்கி இழுத்துவிடும். மேலும், ரகசிய சென்சாரானது எடை அதிகமானவுடன் சைரன் மூலம் சப்தம் எழுப்பும். இந்த முறையால் மாணவர்களின் தற்கொலையை பெருமளவில் தடுக்கலாம் என பயிற்சி மைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயிற்சி நிறுவனங்களின் இந்த திட்டத்துக்கு பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications