தமிழகம் உட்பட இந்தியாவில் 4 பேருக்கு ஜிக்கா வைரஸ் தொற்று.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!
தமிழகம் உட்பட இந்தியாவில் 4 பேருக்கு ஜிக்கா வைரஸ் தாக்குதல் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: தமிழகம் உட்பட இந்தியாவில் 4 பேருக்கு ஜிக்கா வைரஸ் தாக்குதல் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
ஜிக்கா வைரஸ் பாதிப்பு குறித்து ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பக்கன் சிங் குலஸ்தே பதில் அளித்தார்.
அப்போது குஜராத் மாநிலத்தில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 3 பேருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கு ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.
ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்டால் சிலருக்கு தான் நரம்பு சம்பத்தப்பட்ட நோய் ஏற்படும். அவர்களுக்கு அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மத்திய இணையமைச்சர் கூறினார்.