இந்தியா- பாக் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சிக்கல்... பிரிவினைவாதிகளை சந்திப்பதில் பிடிவாதம்
இஸ்லமாபாத் : பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆஜிஸ் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் சந்திப்பை ரத்து செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
டெல்லியில் வரும் 23 ஆம் தேதி பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ், இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இடையே உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு சிறப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் டெல்லி வரவுள்ள நிலையில், அவரை சந்திப்பதற்கு பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி மற்றும் மிர்வாஸ் உமர் பரூக் போன்ற காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தலைமைத் தூதர் இரு தினங்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த சந்திப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாகிஸ்தான் தலைமை தூதரகத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பை நடத்தக்கூடாது என்று பாகிஸ்தானுக்கு இந்தியா அறிவுரையும் வழங்கியிருந்தது.
ஆனால், இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்துள்ள பாகிஸ்தான், டெல்லியில் ஹூரியத் தலைவர்களை தங்கள் நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பார் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.
இந்தியாவுக்கு வரும் பாகிஸ்தான் அதிகாரிகள் பிரிவினைவாதிகளை சந்திப்பது நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள ஒரு நிகழ்வுதான் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர் டி.சி.ஏ. ராகவனிடம் இத்தகவலை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். அப்போது, சர்தாஜ் அஜீஸ்-அஜித் தோவல் சந்திப்புக்காக எந்த முன்நிபந்தனைகளையும் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பிடிவாதத்தால் இருநாடுகளுக்கும் இடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications