பலாத்கார பிரச்சனையால் மாணவரை நிராகரிப்பதா?: ஜெர்மனி பேராசிரியைக்கு இந்தியா கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் பலாத்காரங்கள் அதிகம் என்று கூறி மாணவரை சேர்க்க மறுத்த ஜெர்மனி பல்கலைக்கழக பேராசிரியைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியில் உள்ள பிரபல லீப்ஜிக் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருபவர் ஆனட் பெக் சிக்கிங்கர். அவரிடம் உயிரிவேதிதியல் தொடர்பாக இன்டர்ன்ஷிப் செய்ய இந்திய மாணவர் ஒருவர் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை நிராகரித்து ஆனட் அந்த மாணவருக்கு இமெயில் அனுப்பினார்.

India condemns German university for rejecting Indian student

இந்தியாவில் பலாத்கார சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. என்னிடம் ஏராளமான மாணவிகள் படிக்கிறார்கள். அதனால் உங்களை மாணவராக ஏற்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

இந்த இமெயில் இணையதளத்தில் தீயாக பரவியது. ஆனட் செய்த செயலுக்காக இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் மன்னிப்பு கேட்டார். மேலும் ஆனட்டும் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.

பலாத்கார சம்பவங்களை மேற்கோள்காட்டி மாணவரின் விண்ணப்பத்தை நிராகரித்த பேராசிரியைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+