மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரயில்.. இந்தியா-ஜப்பான் இடையே ஒப்பந்தம் கையெழுத்து!
டெல்லி: இந்தியா மற்றும் ஜப்பான் இடையே, ஆக்கப்பூர்வ அணு சக்தி தொடர்பான ஒப்பந்தம், இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் டெல்லியில் இன்று கையெழுத்தானது. அதேபோல, மும்பை-அகமதாபாத் நடுவே புல்லட் ரயில் திட்டம் கொண்டுவரவும் இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

"இந்தியாவின் பொருளாதார கனவுகளை ஜப்பானைவிட உணர்ந்து கொண்ட நாடு வேறு இருக்க முடியாது" என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு பிரதமர் மோடி தெரிவித்தார்.
"ஜப்பான் நாட்டின் தனியார் முதலீடுகள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. சின்சோ அபே (ஜப்பான் பிரதமர்) இந்தியாவின் பொருளாதார முன்னெடுப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். நாங்கள் இரு நாட்டு உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்" என்றும் மோடி கூறினார்.
இவ்விரு தலைவர்களும், பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு செய்வது, பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மும்பை- அகமதாபாத் இடையே ரூ.98 ஆயிரம் கோடி செலவில் புல்லெட் ரயில் திட்டம், மார்ச் 1ம் தேதி முதல் ஜப்பானியார்களுக்கு வருகையின் போது விசா வசதி ஆகிய ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.
மோடி கூறுகையில், புல்லட் ரயில் ஒப்பந்தம் இந்தியா ரயில்வேயில் பரிணாம வளர்ச்சி தொடங்கியுள்ளது. 508 கி.மீட்டர் தொலைவு கொண்ட இந்த பாதையில் வழக்கமான 8 மணி நேரம் பயண நேரம், புல்லட் ரயிலால், 3 மணி நேரமாக குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது, என்றார்.
ஜப்பான் பிரதமர் சின்சோ அபே பேசுகையில், இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவ ஜப்பானின் அரசு தனியார் துறைகள் இணைந்து செயல்படும். இருநாட்டு உறவை புதிய கட்டத்துக்கு எடுத்துச்சென்றுள்ளோம் என்றார்.
-
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்?












Click it and Unblock the Notifications